ருமேஷ் ரத்னாயகேவை வேகப்பந்து வீச்சாளர்களை கண்காணிக்க் நியமித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம் 1

இலங்கை கிரிக்கெட் வாரியம் செவ்வாய்கிழமையான இன்று முன்னால் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் ரூமேஷ் ரத்னாயகேவை வேகபந்து வீச்சிற்க்கு தலைமையாக நியமித்துள்ளது. 53 வயதான அவரை நியமிப்பதில் எங்களுக்கு மிகப்பெரும்  அனுபவம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம். இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் தோல்வி அடைந்த பிறகு ருமேஷ் ரத்னாயககேவை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ருமேஷ் ரத்னாயகேவை வேகப்பந்து வீச்சாளர்களை கண்காணிக்க் நியமித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம் 2

இலங்கை கிரிக்கெட் வாரியம் பத்திரிக்கை குறிப்பில் வெளியிடப்பட்டதாவது, கொலும்பில் பிறந்த முன்னால் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் ரத்னாயகே இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சை கண்கானிக்கவும், அதற்க்கான திறமைகளை அநநாட்டில் கண்கானிக்கவும் வேகப்பந்து வீச்சு தலைமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

“றத்னாயகே இலங்கையில் தேசிய வேகப்பந்து வீச்சு; திறமையை கண்டறிய தலைமை வகிப்பார். திறமை மற்றும் அதை மேம்படுத்தவும், அத்ற்க்கான பயிற்ச்சி அளிக்கவும் தேசிய உயர்திறனாய்தல் பணியில் தலைமை வகிப்பார்.

ருமேஷ் ரத்னாயகேவை வேகப்பந்து வீச்சாளர்களை கண்காணிக்க் நியமித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம் 3

ருமேஷ், இதற்காக சமிந்தா வாஸ், நுவான் ஜோய்சா, தர்சனா கமாகே, சமினா கமகே, ருசிரா பெராரா மற்றும் ரவீந்திரா புஷ்பகுமாரா போன்ற இலங்கையின் வேகப்பந்து பிரபலங்களுடன் பணிபுரிவார் இலங்கை கிரிக்கெட்டின் மோசமான நிலைமையை கருத்தில் கொண்டு இம்முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ருமேஷ் 1985-86 ல் இந்தியாவிற்க்கு எதிரான தொடரை இலங்கை வெல்ல உறுதுனையாக இருந்தவர் ஆவார். அத்தொடரில் 20 விக்கெட்கள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அப்பத்திரிக்கை குறிப்பில், தெரிவிக்கப்பட்டதாவது கடந்த சில வருடங்களாக இலங்கை கிரிகெட் வாரியம் இலங்கையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படித்தவும், தேசிய அளவில் தகுதி வாய்ந்த திறமையான வீரர்களுக்கு பயிற்ச்சி அளிக்கவும் அதிக அளவிளான நிதியை செலவிட்டுள்ளது.

ருமேஷ் ரத்னாயகேவை வேகப்பந்து வீச்சாளர்களை கண்காணிக்க் நியமித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம் 4

மகிலா ஜெயவர்த்தனே மற்றும் குமார சங்ககராவின் ஓய்விற்க்கு பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி அவர்களுக்கான சரியான மற்றும் இல்லாமல் தள்ளாடி வருகிறது. அவர்களின் இடம் அணியில் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது.

மேலும் அதில் இலங்கை கிரிக்கெட் வாரியம் எப்போதுமே தரமான வீரர்களை உருவக்கும் முயற்சியில் தான் இருக்கும். இப்போது அமைக்கப்பட்டுள்ள தேசிய திறனறிதல் ஆய்வில் இலங்கை கிரிக்கெட் நிச்சயமாக திறமையான வீரர்களை கண்டறியும் என்பதில்ல் எப்போதும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

ரத்னாயகே தனது சர்வதேச கிரிகெட் வாழ்க்கையில் 70 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 23 டெஸ்ட் போட்டிகள் இலங்கைக்காக விளையாட் உள்ளான். டெஸ்ட் போட்டியில் அவரது சிறந்த பந்து வீச்சு 66/6.

மூன்றாவது டெஸ்ட் 12 ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் நாட்டின் பெருமைக்காக ஆடப்போகும் இலங்கை அணிக்கு தினேஷ் சண்டிமால் தலைமை தாங்குவார். பார்ப்போம் இலங்கை வீரர்கள் எவ்வாறு திருப்பி அடிப்பார்கள் என்று.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *