நாளை மீண்டும் சூரியன் உதயமாகும் - கடுப்பில் ரோகித் ட்விட் 1
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் விமர்சனத்துக்குள்ளான ரோகித் சர்மா தனது டுவிட்ட்டர் பகுதியில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், டெஸ்ட் அணியிலும் அவருக்கு இங்கிலாந்து தொடரில் இரண்டு சதங்கள் அடித்தும் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் தான் இவ்வாறு ட்வீட் செய்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

ஐயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ரோகித் சர்மா சிறப்பாகவே விளையாடினார். மிக முக்கியமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்து தான் ஒரு ஹிட் மேன் என நிரூபித்தார் ரோகித் சர்மா.நாளை மீண்டும் சூரியன் உதயமாகும் - கடுப்பில் ரோகித் ட்விட் 2

இதனையடுத்து இந்திய டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா இடம் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று வெளியிடப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மாவின் பெயர் இடம் பெறவில்லை.

இந்தியாவுக்காக 183 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் ரோகித் சர்மா. ஆனால் இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 177, ஆவரேஜ் 39.77 என மொத்தமாக 1479 ரன்களை குவித்துள்ளார். ஆனால் எப்போதாவது டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவார் ரோகித் சர்மா, ஒரு சில போட்டிகளில் நன்றாக விளையாடுவார் டெஸ்ட்டில் மீண்டும் சொதப்புவார்.

அதனால் டெஸ்ட் அணியில் மட்டுமே உள்ளே வெளியே ஆட்டமாடிவந்தார் ரோகித். இந்தியா ஒரு நாள் போட்டிகளில் தவிர்க்க முடியாத நபராக இருக்கும் ரோகித்துக்கு, டெஸ்ட்டில் மட்டும் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை என்ற வருத்தம் எப்போதும் உண்டு.நாளை மீண்டும் சூரியன் உதயமாகும் - கடுப்பில் ரோகித் ட்விட் 3

இந்த ஏக்கத்தை பல முறை பல பேட்டிகளில் வெளிப்படையாக கூறியுள்ளார் ரோகித். ஆனால் தேர்வு வாரியமோ ரோகித்தை டெஸ்ட் அணியில் சேர்ப்பதை குறித்து யோசித்துக் கூட பார்க்கவில்லை. அதனால்தான் இம்முறையும் டெஸ்ட் அணியில் ரோகித்தின் பெயர் இடம் பெறவில்லை.

ஒருநாள் போட்டி தொடரின் முதல் போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தினார். இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார். ரோகித் சர்மாவின் பங்கு அணியின் வெற்றிக்கு மிகவும் உதவியாய் இருந்து வருகிறது.
Rohit Sharma, KL Rahul, Cricket, India, Sri Lanka,
ரோகித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தால் இந்திய அணியின் ஸ்கோர் குறைவாக இருந்து வருகிறது. ரோகித் சர்மா விரைவில் ஆட்டமிழந்தால் அணி தடுமாற்றம் காண தொடங்கி உள்ளது. அணிக்கு முக்கியமான பேட்ஸ்மேனாக உருவாகி ரோகித் சர்மா தற்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில், சூரியன் மீண்டும் உதயமாகும் என்று பதிவிட்டுள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *