செம்ம மாஸ்!! ராயுடுவிற்கு பதில் ரெய்னா!! – இங்கிலாந்து தொடருக்கு தயார்
யோ-யோ உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்த அம்பட்டி ராயுடுவிற்கு பதில் ரெய்னா தேர்வாகி உள்ளார். இந்த செய்தியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.
இது ரெய்னா மீண்டும் ஒருநாள் அணியில் தன் இடத்தை தக்க வைத்துக்கொள்ள மிகவும் உதவியாகா இருக்கும். மேலும், 2019 உலகக்கோப்பை தொடருக்கான அணியிலும் ரெய்னா இடத்தை பிடிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
இந்திய கிரிக்கெட் அணி, ஓவ்வொரு தொடரில் விளையாடுவதற்கு முன்பாகவும் வீரர்களுக்கு யோ-யோ சோதனை என்ற உடற்தகுதி சோதனை நடத்தப்படுகிறது. அதில் வீரர்கள் 16.3 என்ற மதிப்பெண்களை பெற்றால் மட்டுமே இந்திய அணியில் இடம்பெற முடியும்.
UPDATE: @ImRaina to replace Ambati Rayudu in India's ODI squad for series against England.
Details – https://t.co/lEODJoRVtV pic.twitter.com/6Us2ao35m5
— BCCI (@BCCI) June 16, 2018
இந்நிலையில், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான யோ-யோ சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டோனி, ரெய்னா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். இதன்மூலம், அயர்லாந்து உடனான டி20 போட்டி மற்றும் இங்கிலாந்து உடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க அவர்கள் தகுதிப்பெற்றனர்.
இந்த சோதனையில், சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி, இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற அம்பதி ராயுடு, குறைவான மதிப்பெண்களை பெற்று தோல்வியடைந்தார். இதனால் அவர் இங்கிலாந்து தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ராயுடு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தோல்வி அடைந்த்தால் ஏற்கனவே டி20 அணியில் இருக்கும் சுரேஷ் ரெய்னாவிற்கு ஒருநாள் போட்டியிலும் ஆட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கு இந்தியாவின் அணி:
விராட் கோலி (கேப்டன்). ஷிகார் தவான். ரோஹித் ஷர்மா. KL ராகுல். ஷிரியாஸ் ஐயர். சுரேஷ் ரெய்னா. தோனி, (விக்கெட் கீப்பர்). தினேஷ் கார்த்திக். யூசுவெந்திர சஹால். குல்தீப் யாதவ். வாஷிங்டன் சுந்தர். புவனேஷ்வர் குமார். ஜாஸ்ரிட் பம்ரா. ஹார்டிக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.