இது மட்டும் உண்மையா இருந்தா ஹர்திக் பாண்டியாவுக்கு டீமில் இடமே கிடைச்சிருக்காது… மைக்கெல் கிளார்க் சொல்கிறார்

இது மட்டும் உண்மையா இருந்தா ஹர்திக் பாண்டியாவுக்கு டீமில் இடமே கிடைச்சிருக்காது… மைக்கெல் கிளார்க் சொல்கிறார்

ரோஹித் சர்மா – ஹர்திக் பாண்டியா இடையே மன கசப்பு எதுவும் இருப்பதாக தான் கருதவில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கெல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த பெருமைக்குரிய கேப்டனாக திகழ்ந்த ரோஹித் சர்மாவை, திடீரென கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்து அவரையே தனது அணியின் கேப்டனாகவும் நியமித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் அடையாளமாக திகழ்ந்த ரோஹித் சர்மா அவமதிக்கப்பட்ட விவாகரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி விவாகாரத்தால் ரோஹித் சர்மா – ஹர்திக் பாண்டியா இடையேயும் மனகசப்பு ஏற்பட்டுள்ளது, இருவர் இடையேயான மனகசப்பு இந்திய அணியிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரோஹித் சர்மா – ஹர்திக் பாண்டியா இடையே மனகசப்பு இருந்திருந்தால் ஹர்திக் பாண்டியாவிற்கு டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடமே கிடைத்திருக்காது என முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கெல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மைக்கெல் கிளார்க் பேசுகையில், “எனது பார்வையில் ரோஹித் சர்மா – ஹர்திக் பாண்டியா இடையே எவ்விதமான மனகசப்பும் இல்லை, ஒருவேளை இருவர் இடையே பிரச்சனை இருந்திருந்தால் ஹர்திக் பாண்டியாவிற்கு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடமே கிடைத்திருக்காது. யார் வேண்டும், யார் வேண்டாம் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் ரோஹித் சர்மாவிற்கு உள்ளது. டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை பார்க்கும் பொழுது, ரோஹித் சர்மா இந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்றாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களை இந்த முறை அதிகம் சார்ந்து இருக்கும். ஹர்திக் பாண்டியாவின் தேவை இந்திய அணிக்கு மிக அவசியம் என்பதால் ஹர்திக் பாண்டியாவை, ரோஹித் சர்மா ஆதரிக்கவே விரும்புகிறார்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.