பயிற்சியாளரை விராட் கோலி தான் தேர்வு செய்யவேண்டும்

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக யார் வர வேண்டும் என விராட் கோலி தான் தீர்மானிக்க வேண்டும். புதிய பயிற்சியாளர் யார் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தான் தேர்ந்தெடுப்பார் என கிரிக்கெட் நிர்வாக குழு கூறியது.

திங்கட்கிழமை அன்று பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த விரேந்தர் சேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பைபஸ், லால்சந்த் ராஜ்புட் மற்றும் ரவி சாஸ்திரியிடம் கிரிக்கெட் நிர்வாக குழுவில் இருக்கும் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விவிஸ் லட்சுமண் ஆகியோர் தேர்வு நடத்தினர். ஆனால், புது பயிற்சியாளர் என்று அறிவிக்க சில நாள் ஆகும் என கிரிக்கெட் நிர்வாக குழு அறிவித்தது.

சமீபத்தில், இந்திய அணியின் புது பயிற்சியாளரை நியமிக்க விராட் கோலி தலையிட கூடாது என இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியது. ஆனால், தற்போது புது பயிற்சியாளரை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை வந்துள்ளது.

விராட் கோலிக்கு நெருங்கியவரான ரவி சாஸ்திரி தான் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு வரும் வாய்ப்பு இருந்தது. ஆனால், இந்த பந்தயத்தில் இருந்து அவர் விலகியதாக சில தகவல்கள் வந்துள்ளன.

கிடைத்த தகவலின் படி, விரேந்தர் சேவாக் மற்றும் டாம் மூடி ஆகிய இருவரில் இருந்து யாராவது ஒருவரை விராட் கோலி தேர்வு செய்ய வேண்டும் என தெரிகிறது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.