எங்கள் தோல்விக்கு காரணம் இந்த இந்திய வீரர் தான்: புலம்பும் வங்கதேச கேப்டன் 1

ரோஹித் சர்மாவின் காட்டி தர்பார், ‘தனிஒருவரின்’ 43 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்த ஆகச்சிறந்த பேட்டிங்கால் ராஜ்கோட்டில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரோஹித் சர்மா என்ற ‘புயல்’ களத்தில் மையம் கொண்டால் எந்த மாதிரியான சேதத்தை எதிரணிக்கு ஏற்படுத்தும் என்பதை நேற்று தனது காட்டடியின் மூலம் வங்கதேச வீரர்களுக்கு உணர்த்திவிட்டார். 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் என 43 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அவர் ஒருவரே காரணமாகினார். ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

எங்கள் தோல்விக்கு காரணம் இந்த இந்திய வீரர் தான்: புலம்பும் வங்கதேச கேப்டன் 2
Mahmudullah (Captain) of Bangladesh bats during the 2nd T20I match between India and Bangladesh held at the Saurashtra Cricket Association Stadium, Rajkot on the 7th November 2019.
Photo by Deepak Malik / Sportzpics for BCCI

முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. 154 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்கதேசம், இந்திய அணி தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்திய அணி கடந்த 2018-ம் ஆண்டில் 14 டி20 போட்டிகளில் 7 போட்டிகளில் தோல்வியும், 7 போட்டிகளில் வெற்றியும் பெற்றிருந்தது.

ஆனால், இந்த ஆண்டில் இந்த ஆட்டத்தோடு 16 டி20 போட்டிகளில் விளையாடி 13-வது வெற்றியைப் பெற்றது. இதில் பெரும்பாலும் சேஸிங் செய்தே அதிகமான வெற்றிகளை இந்திய அணி ருசித்ததுள்ளது.

எங்கள் தோல்விக்கு காரணம் இந்த இந்திய வீரர் தான்: புலம்பும் வங்கதேச கேப்டன் 3

இந்திய அணியைப் பொறுத்தவரை வெற்றிக்கு உரித்தானவர் ரோஹித் சர்மா மட்டுமே. தனது 100-வது டி20 போட்டியில் பங்கேற்ற ரோஹித் சர்மாவுக்கு இந்த ஆட்டம் மறக்க முடியாத வெற்றியாக அமைந்தது. மிகக்குறைந்த பந்துகளில் 50-க்கும் மேற்பட்ட அதிக ரன்களை மூன்றாவது முறையாக ரோஹித் சர்மா சேர்த்துள்ளார். ேமலும் டி20 போட்டிகளில் அதிகமான ரன்கள் அடித்த வீரர்களில் சுரேஷ் ரெய்னாவை தோற்கடித்து 2-வது இடத்துக்கு ரோஹித் சர்மா முன்னேறினார்.

ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 3 சதங்கள் அடித்து அசுரத்தனமான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் ரோஹி்த் சர்மாவுக்கு டி20 போட்டியைப் பற்றி சொல்லவே தேவையில்லை. ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தை வங்கதேச வீரர்கள் வாய்பிளந்து பார்த்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *