மிட்செல் ஸ்டார்க் சரியாக ஆடவில்லை, அதுவே தோல்விக்கு காரணம்: ஆஸி கேப்டன் டிம் பெய்ன் 1

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்ததற்கு மிட்செல் ஸ்டார்க் அற்புதமாக பந்து வீசவில்லை என்பதுதான் என ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறியுள்ளார்.

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம் 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் அடிலெய்டில் கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. புஜாரா அபாரமாக ஆடி 123 ரன்களை குவித்தார். ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் 72 ரன்களை எடுத்தார்.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா 307 ரன்களை எடுத்திருந்தது. 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 104/4 ரன்களை எடுத்திருந்தது.மிட்செல் ஸ்டார்க் சரியாக ஆடவில்லை, அதுவே தோல்விக்கு காரணம்: ஆஸி கேப்டன் டிம் பெய்ன் 2
இதன் தொடர்ச்சியாக கடைசி நாளான திங்கள்கிழமை ஷேன் மார்ஷ்-டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். 14 ரன்கள் எடுத்த நிலையில் டிராவிஸ் ஹெட் , இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மார்ஷ்-டிம் பெயின் ரன் குவிப்பு: 31 ரன்களுடன் ஆடத் தொடங்கிய ஷேன் மார்ஷ் தனது 10-ஆவது டெஸ்ட் அரை சதத்தை அடித்தார். 5 பவுண்டியுடன் 60 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் டிம் பெய்ன் 41ரன்களுடன் பும்ரா பந்துவீச்சில் பந்த்திடம் கேட்ச் கொடுத்தார். பௌலர்களான பேட் கம்மின்ஸ், மிச்செல் ஸ்டார்க் ஆகியோர் தோல்வியை தவிர்ப்பதற்காக போராடினர்.ஆனால் இருவரும் தலா 28 ரன்கள் எடுத்த நிலையில் முறையே பும்ரா, முகமது சமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். 8-ஆவது விக்கெட்டுக்கு இருவரும் 41 ரன்களை சேர்த்தனர்.

மிட்செல் ஸ்டார்க் சரியாக ஆடவில்லை, அதுவே தோல்விக்கு காரணம்: ஆஸி கேப்டன் டிம் பெய்ன் 3

நாதன் லயன் 38: ஆஸி. சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் 9-ஆவது விக்கெட்டுக்கு நின்று ஆடி, இந்திய பெளலர்களின் பொறுமையை சோதித்தார். 3 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் கடைசி விக்கெட்டாக ஜோஷ் ஹேஸல்வுட் 13 ரன்களுக்கு அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினார். இருவரும் சேர்ந்து கடைசி விக்கெட்டுக்கு 32 ரன்களை சேர்த்தனர்.
291 ஆல் அவுட்: இறுதியில் 119.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 291 ரன்களை மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆட்ட நாயகன் புஜாரா
முதல் இன்னிங்ஸில் 246 பந்துகளில் 123 ரன்களை குவித்த புஜாரா, இரண்டாவது இன்னிங்ஸிலும் 204 பந்துகளில் 71 ரன்களை சேர்த்து அணியின் ஸ்கோர் உயர வழிவகை செய்தார். இதன் மூலம் ஆட்ட நாயகன் விருதையும் அவர் தட்டிச் சென்றார்.
வெளிநாடுகளில் நிகழாண்டு 2018-இல் இந்திய அணி வெளிநாடுகளில் பெற்ற டெஸ்ட் வெற்றிகளில் 50-க்கு மேற்பட்ட ரன்களை குவித்தவர் என்ற பெருமையை புஜாரா பெற்றுள்ளார். ஜோஹன்னஸ்ர்க்கில் 50, டிரென்ட் பிரிட்ஜில் 72, அடிலெய்டில் 123, 71 ரன்களை எடுத்தார்.மிட்செல் ஸ்டார்க் சரியாக ஆடவில்லை, அதுவே தோல்விக்கு காரணம்: ஆஸி கேப்டன் டிம் பெய்ன் 4

இந்தியா அபார பந்துவீச்சு
முதல் இன்னிங்ஸை போலவே இந்திய பந்துவீச்சாளர்கள் சீரான பந்துவீச்சை இரண்டாவது இன்னிங்ஸிலும் தொடர்ந்தனர். பும்ரா 3-68, அஸ்வின் 3-92, சமி 3-65, இஷாந்த் 1-48 ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வெற்றிக்கு வழிவகுத்தனர்.

2 முறை தப்பிய பேட் கம்மின்ஸ்
நிலைத்து ஆடிக் கொண்டிருந்த பேட் கம்மின்ஸ் தொடர்ந்து 4 பந்துகளில் 2 முறை ஆட்டமிழக்க வேண்டியது. ஆனால் மேல்முறையீட்டில் தொழில்நுட்ப காரணங்களில் அவுட்டில்லை என அறிவிக்கப்பட்டு தப்பினார்.

புஜாராவை அவுட்டாக்க முடியவில்லை
எங்கள் அணியின் லோயர் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக போராடினர். இந்த வெற்றி இந்தியாவுக்கு உரியது. நாங்கள் வெற்றி பெற முடியும் என நினைத்தோம். ஆனால் புஜாரா ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவரை அவுட்டாக்குவதே கடினமாக இருந்தது.
-டிம் பெய்ன்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *