2) ஆஸ்திரேலிய அணி சென்ற பஸ் மீது கல் வீசி தாக்கிய இந்திய ரசிகர்கள்
2017 அக்டோபர் மாதம் 11ம் தேதி, குவஹாத்தியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடிய டி20 போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி, 118 ரன்களில் சுருண்டு தோற்றது. இதை இந்திய வீரர்களே சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால், ரசிகர்கள் அதனை அப்படி எடுத்துக் கொள்ளவில்லை குவஹாத்தியில் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடந்ததால், மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பியது. 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அன்றைய ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்தனர். பல வருடங்களுக்கு பிறகு தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் நாயகர்கள் தங்கள் மண்ணில் விளையாடுவதை பார்க்க மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடி தோற்றதால் அவர்கள் மிகுந்த அதிருப்திக்கு ஆளாகினர்.
இந்நிலையில், போட்டி முடிந்த பின், ஆஸி., வீரர்கள் தங்கள் பேருந்தில் ஏறி ஹோட்டலுக்கு செல்லத் தயாரானார்கள். அப்போது, அந்த பேருந்தின் மீது மர்ம நபர்கள் சிலர் கல் வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால், பேருந்தின் பக்கவாட்டுப் பகுதியில் உள்ள ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இதனால் பீதிக்குள்ளான ஆஸி., வீரர்களை, பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர். பேருந்து தாக்கப்பட்டது தொடர்பான புகைப்படத்தை ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தனது பயத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். இதற்கு அசாம் கிரிக்கெட் சங்கம் பகிரங்க மன்னிப்பு கேட்டது.