ஐசிசி விதிகளை மீறியதால் சோட்சோபிக்கு 8 ஆண்டு தடை

2015 ரேம் ஸ்லாம் தொடரின் போது பிக்சிங் செய்ய முயற்சித்தேன் என ஒப்புக்கொண்டதால் தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் சோட்சோபிக்கு 8 ஆண்டுகளுக்கு சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட தடை விதிக்க பட்டுள்ளது.

அவரது எட்டு ஆண்டு தடை 24 ஏப்ரல் 2017-இல் இருந்து தொடங்குகிறது, அன்று தான் அவரை மேட்ச்-பிக்சிங் செய்ய பட்டதால் இடைநீக்கம் செய்தார்கள்.

“மேட்ச் பிக்சிங் செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டதால், கிரிக்கெட் விதிமுறைகளை மீறியதால் தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான சோட்சோபியை தென்னாபிரிக்கா கிரிக்கெட் வாரியம் 8 ஆண்டுகளுக்கு தடை விதித்தது, என தென்னாபிரிக்கா கிரிக்கெட் வாரியம் குறிப்பிட்டிருந்தது.

“2015 ரேம் ஸ்லாம் டி20 தொடரில் பிக்சிங் செய்தேன் என ஒப்புக்கொண்டதால் முன்னாள் தென்னாபிரிக்கா, லயன்ஸ் மற்றும் டைட்டன்ஸ் அணியின் வீரர் குலாம் போடிக்கு கிரிக்கெட்டில் விளையாட 20 ஆண்டுகள் தடை விதித்தது ஐசிசி. இவருடன் மற்ற ஐந்து வீரர்களுக்கு 2 – 12 ஆண்டு வரை தடை விதிக்கப்பட்டது,” என மேலும் தெ.ஆ கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.