ரவி சாஸ்திரி மீண்டும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்போது இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வென்றுள்ளது. தொடர்ந்து நான்கு நாட்கள் விளையாடியதால், வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் ஒருநாள் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இந்த சமயத்தில், ரவி சாஸ்திரி நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆண்டிகுவாவில் உள்ள “கோகோ பே”யில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்தார். “வெயில் வெயில் வெயில். இது ஜூஸ் அருந்துவதற்கான நேரம். கோகோ பே பாறைகள் நிறைந்து அழகாக உள்ளது. ஆண்டிகுவா,” என்று பதிவிட்டார். சாஸ்திரியின் புகைப்படத்தை உடனே நெட்டிசன்கள் கிண்டல் செய்யத் தொடங்கினர்.
— vivek.N (@keviv99) August 26, 2019
I go for whiskey ? pic.twitter.com/Su73EQAjlE
— आत्मनिर्भर! Bhrustrated (@FunMauji) August 26, 2019
https://twitter.com/Pranjultweet/status/1166033929519816704?s=20
https://twitter.com/manishnwaghela/status/1166030971151343616?s=20
Concentrate on your fitness as well as stomach… U r a Indian coach not an galli coach
— MVSC (@iam_mvsc) August 26, 2019
U need ? not juice. Please show a side view of urs in next picture.. wanted to see growth of your baby?
— Brijesh Negi (@midastouch786) August 26, 2019
U need ? not juice. Please show a side view of urs in next picture.. wanted to see growth of your baby?
— Brijesh Negi (@midastouch786) August 26, 2019
https://twitter.com/iamAKRath/status/1166037720201740290?s=20
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் தொடங்கியது. உலகக் கோப்பைக்கு பிறகு பும்ரா தன்னுடைய முதல் போட்டியை ஆடியுள்ளார். தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய அணியின் துணைக் கேப்டன் ரஹானே, இரண்டு இன்னிங்ஸிலும் நட்சத்திர வீரராக திகழ்ந்தார். முதல் இன்னிங்ஸில் அவர் 81 ரன்கள் குவித்தார். இரண்டாவது இன்னிங்ஸில், 419 ரன்கள் எடுக்க உதவினார்.
மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் கடைசி இன்னிங்ஸில் ஒருபோதும் கட்டுப்பாட்டைக் காணவில்லை, இறுதியில் ஆசியாவுக்கு வெளியே ரன்கள் அடிப்படையில் இந்தியா தங்களது மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்ய உதவியது.

இந்த வெற்றியின் மூலம், கேப்டனாக சவுரவ் கங்குலி பெற்ற வெளிநாட்டு வெற்றிகளை விராட் கோலி இப்போது கடந்துள்ளார்.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் இணைந்து இந்தியாவும் 60 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் உள்ளது. ஆஷஸ் போட்டியாளர்களான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன, ஏனெனில் இருவரும் சமநிலையில் விளையாடுவதைத் தவிர தலா ஒரு போட்டியில் வென்று தோற்றனர்.