தென்னாப்ரிக்காவை வீழ்த்தியது இண்டிய ட்விட்டரில் ரசிகர்கள் ரகளை

ஜோகன்னஸ்பெர்க்: தென்னாப்ரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சமியின் அபார பந்து வீச்சால் இந்திய அணி வெற்றி பெற்றது

தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க்கில் 3 வது டெஸ்ட் போட்டியின் 5 ம் நாள் ஆட்டம் இன்று நடந்தது. இதில் 247 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய தென்னாப்ரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன் மட்டுமே எடுத்தது. இந்நிலையில் 63ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்திய பவுலர்கள் அபாரமாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு உதவினர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 187, ரன்னும் தென்னாப்ரிக்க அணி 194 ரன்களும் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.முகமது சமி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும், இஷாந்த், பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.