இந்திய அணியில் தற்போது இடமில்லாமல் தவித்து வருபவர் யுவராஜ் சிங். கடைசியாக அவர் இந்திய அணிக்காக ஆடியது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில். தற்போது அடுத்த இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ஓய்வு எனக்கூறி கலட்டி விடப்பட்டிருக்கிறார்.
தற்போது மேலும் ஒரு செய்தியுடன் வந்திருக்கிறார் யுவ்ராஜ் சிங். இந்த வருட தீபாவளிக்கு பட்டாசுகளை வெடித்துக் கொண்டாட வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஒரு வீடியோ பதிவினை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் யுவ்ராஜ் சிங்.
ஹெல்லொ ஆல், இது என்னுடைய தாழமையான வேண்டுகோள். இந்த வருட தீபாவளிக்கு பட்டாசினை கொளுத்தாதீர்கள், கடந்த வருட தீபாவளிக்கு நாம் வெடித்த பட்டாசீனால் நம் நாடு மிக மோசமாக காணப்படது. நமது காற்று மிகவும் பாதிக்கப்பட்டது. அதனால் என்னால் வீட்டை விட்டு கூட வெளியே வர முடியாத அள்விற்க்கு காற்று மாசுபட்டிருந்தது. இது போன்ற ஒரு சூழல் குழந்தைகள்,நண்பர்கள், பெற்றோர்கள் என அனைவரையும் பாதிக்கும். இது ஆரோக்யமானதல்ல.
என அந்த ட்விட்டர் வீடியோவில் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் பலவற்றைக் கூறியிருந்தார், தீபாவளி அன்று குழந்தைகள் முகத்திற்கு கவசம் அணிந்து வெளியே செல்வது பார்ப்பதற்கு கடினமாக உள்ளது. தீபாவளி என்பது ஒளிகளுக்கான விழா, பட்டாசுகள் வெடித்து காற்றை மாசுபடுத்துவத்ற்க்குப் பதில் பலரது வாழ்க்கையில் ஒளி வீசும் வண்ணம் செயல் படலாம்.
எனவும் அந்த வீடியோ பதிவில் தெரிவித்திருந்தார்.
இதே போன்ரு இன்னொரு கிரிக்கெட் வீரரும் கோரிக்கையை வைத்துள்ளார். முன்னால் இந்திய அதிரடி மன்னன் விரேந்தர் சேவாக்கும் இதே போன்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோல் விடுத்துள்ளார். ஆனால் அவர் வைத்தது கோரிக்கை நிறைய பட்டாசுகள் வெடித்துக் கொண்டாட வேண்டும் என.
இந்த தீபாவளிக்கு சிறிது நிறைய பட்டாசுகள் சேர்த்து வெடித்துக் கொண்டாடுங்கள் என தனது ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். இருவரும் அதிரடிக்குப் பெயர் போனவர்கள். இந்த கருத்தில் ஒத்துப் போகாமல் இருக்கிறது. சொல்ல முடியாது, இதனால் இரு வீரர்களின் ரசிகர்களுக்கும் சமூக வலை தளங்களில் மீம்ஸ் போர் மூண்டாலும் ஆச்ச்ரியப்படுவதற்க்கில்லை.