இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான விஜய் சங்கர் சிக்ஸ் பேக் உடலமைப்பு கொண்ட படத்தை டுவிட்டரில் வெளியிட்டதை கண்டு ரசிகர்கள் ட்ரோல் செய்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர். 28 வயதாகும் இவர் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். ஹர்திக் பாண்டியா இல்லாத நேரத்தில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இடம் பிடித்தார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, பேட்ஸ்மேன் வரிசையிலும் களம் இறக்கப்பட்டார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம் பிடித்திருந்தார். இரண்டு முறை காயம் ஏற்பட்டதால் தொடர்ந்து விளையாட முடியாமல் இந்தியா திரும்பினார்.
அதன்பின் இதுவரை இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அவரது உடலமைப்பு விளையாட்டு வீரர்களுக்கு இருப்பது போன்று இருக்காது. ஆனால் தற்போது கடுமையான உடற்பயிற்சி மூலம் சிக்ஸ் பேக் உடலமைப்பை கொண்டுள்ளார்.
விஜய் சங்கரை ட்ரோல் செய்த டுவிட்டர்வாசிகள்
தனது கடந்த கால படத்தையும், தற்போதைய சிக்ஸ் பேக் படத்தையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
The sweat, the time, the devotion.
It pays off! #TransformationTuesday pic.twitter.com/oSyNWvMmVJ— Vijay Shankar (@vijayshankar260) October 15, 2019
Next Kollywood hero in making ? just fun, great looking champ, way to go 3D BOY
— Monisha Uday (@MonishaUday) October 15, 2019
https://twitter.com/MovTVsMusAddict/status/1184099455903027201?s=20
நடிக்க வந்து விடாதீர்கள் விஜய் விளையாட்டில் நீங்கள் சாதனைகள் படைக்க ஆர்வமுடன் காத்திருக்கிறோம்.
— dhanesh (@dhaneshipt) October 15, 2019
Good tranfromation ji… But u lost u r place in Indian team…. Work hard and come back
— seethu (@seethu11) October 15, 2019
இந்நிலையில்,
இந்தியாவிலுள்ள உள்ளூர் அணிகள் பங்கேற்கும் விஜய் ஹசாரே ஒருநாள் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை-ஜார்கண்ட் இடையேயான போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரராக யாசாஸ்வி ஜெயஷ்வால் (Yashasvi Jaiswal) என்ற 17வயது இளம் களமிறங்கினார்.
இவர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். இவரின் சிறப்பான ஆட்டத்தால் மும்பை அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்தது. அசத்தலாக விளையாடிய யாசாஸ்வி ஜெயஷ்வால் 17 பவுண்டரிகள், 12 சிக்சர்களுடன் 154 பந்துகளில் 203 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதன்மூலம் மிகவும் குறைந்த வயதில் இரட்டை சதம் கடந்த வீரர் என்ற உலக சாதனையை இவர் படைத்துள்ளார்.
இவர் 17 வயது 292 நாட்களில் இரட்டை சதத்தை கடந்து இந்தச் சாதனையை படைத்துள்ளார். அதாவது சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் உள்ளூர் லிஸ்ட்-ஏ போட்டி ஆகிய இரண்டிலும் சேர்த்து குறைந்த வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.
நடப்பு விஜய் ஹசாரே தொடரில் அடிக்கப்படும் இரண்டாவது இரட்டை சதம் இதுவாகும். ஏற்கெனவே கேரளா வீரர் சஞ்சு சாம்சன் கடந்த போட்டியில் இரட்டை சதம் கடந்து அசத்தியிருந்தார். மேலும் நடப்பு விஜய் ஹசாரே தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் யாசாஸ்வி முதலிட்டத்திற்கு முன்னேறி உள்ளார். இவர் நடப்பு தொடரில் 5 போட்டிகளில் களமிறங்கி 585 ரன்களை சேர்த்துள்ளார்.