முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரும் கர்நாடக கிரிக்கெட் வீரருமான ஆர் வினய் குமார் கர்நாடக ரஞ்சி கிரிக்கெட் அணிக்கு குட் பாய் சொல்லி விடய் பெற்றுள்ளார். கர்நாடக கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான வினய் குமார் பாண்டிச்சேரி அணிக்காக விளையாட இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார். 35 வயதான இவர் இந்திய அணிக்காகவும் விளையாடியுள்ளார். கர்நாடக ரஞ்சி அணிக்காக விளையாடி வரும் இவர், அந்த அணியின் கேப்டனாகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் பாண்டிச்சேரி அணிக்கு மாறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஆல்வின் காளிச்சரம் ஆலோசகராக நியமிக்கப்பட இருக்கிறார். கர்நாடக அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஜே அருண் குமார் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்.
வினய் குமார் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 31 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2013-14, 2014-15 ரஞ்சி டிராபியில் கர்நாடக அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளதாவது…
“கர்நாடக கிரிக்கெட்டுக்கு விடைசொல்லும், இந்த முடிவை நான் மிகுந்த மனதுடன் எடுத்துள்ளேன். எனது 15 ஆண்டுகால பயணம் அற்புதமானது, மறக்கமுடியாதது, எனது பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்கள் கே.எஸ்.சி.ஏ நிர்வாகம் , எனது மூத்தவர்கள், எனது அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், ஆதரவு ஊழியர்கள், ஊடக உறுப்பினர்கள் மற்றும் கர்நாடக மக்கள் அனைவரும் முதல் நாள் முதல் தங்கள் அன்பையும் ஆதரவையும் எனக்குக் காட்டியுள்ளனர் ”என்று வினய் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
Thank you all ?? pic.twitter.com/TnobfrqKor
— Vinay Kumar R (@Vinay_Kumar_R) August 20, 2019
2013-14 மற்றும் 2014-15 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியான ரஞ்சி டிராபிக்கு மாநில அணியை வழிநடத்தியவர் வெற்றி பெற்றவர். கர்நாடகாவுடன் விஜய் ஹசாரே டிராபி மற்றும் ஈரானி கோப்பையையும் கேப்டனாக இருந்து வெற்றி கொடுத்துள்ளார். கர்நாடவைச் தாவங்கரேவைச் சேர்ந்த வினய், 2004 ஆம் ஆண்டில் கர்நாடகாவுக்காக தனது முதல் தர போட்டியில் அறிமுகமானார். தனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையில் கர்நாடகா அணிக்காக 130 போட்டிகளில் ஆடி 459 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இவருக்கு கர்நாடக வீரர்கள் தங்கள் முன்னாள் கேப்டனுக்கு சமூக ஊடகங்களில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.