கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் வலாற்றின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறோஸ்டியானோ ரொனால்டோ தான் என கூறியுள்ளார் விராட் கோலி.
போர்ச்சுகல் அணியை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் கால்பந்து வரலாற்றின் தலைசிறந்த வீரர் என புகழாரம் சூட்டியுள்ளார் விராட் கோலி. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த கால்பந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
பீபா உலகக்கோப்பையில் இன்று நடைபெற்ற ‘பி’ பிரிவு போட்டியில், பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணி, தரவரிசையில் 41வது இடத்தில் இருக்கும் மொராக்கோ அணியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரரும் அந்த அணியின் கேப்டனுமான ரொனால்டோ ஆட்டத்தின் 4வது நிமிடத்தில்,கார்னரிலிருந்து அடிக்கப்பட்ட பந்தை ஹெட்டர் மூலம் அற்புதமான கோலாக மாற்றினார். இந்தக் கோலின் மூலம், போர்ச்சுகல் அணி ஆட்டத்தில் 1-0 என்ற முன்னிலை பெற்றது.
போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோசர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த கால்பந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
பீபா உலகக்கோப்பையில் இன்று நடைபெற்ற ‘பி’ பிரிவு போட்டியில், பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணி, தரவரிசையில் 41வது இடத்தில் இருக்கும் மொராக்கோ அணியை எதிர்கொண்டது.
View this post on InstagramSelf belief, determination, courage and pure passion. The G.O.A.T. @cristiano
A post shared by Virat Kohli (@virat.kohli) on
இந்தப் போட்டியில், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரரும் அந்த அணியின் கேப்டனுமான ரொனால்டோ ஆட்டத்தின் 4வது நிமிடத்தில்,கார்னரிலிருந்து அடிக்கப்பட்ட பந்தை ஹெட்டர் மூலம் அற்புதமான கோலாக மாற்றினார். இந்தக் கோலின் மூலம், போர்ச்சுகல் அணி ஆட்டத்தில் 1-0 என்ற முன்னிலை பெற்றது.
“அட என்னப்பா ? மெஸ்ஸி கலக்குவார்னு சொன்ன ஆனா ஓரு கோல் கூட அடிக்க காணோமே” கால்பந்து பற்றி தெரிந்தும் தெரியாதவர்களும் கூட இந்தக் கேள்வியைதான் இப்போது முதலில் முன் வைக்கிறார்கள். அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான கால்பந்து ரசிகர்களின் கதாநாயகன் லியோனல் மெஸ்ஸி. இந்தாண்டு மெஸ்ஸியால் அர்ஜென்டினாவுக்கு உலக் கோப்பையை வாங்கிக் கொடுக்க முடியும் என்று பலரும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் இந்த உலக் கோப்பையில் முதல் ஆட்டத்தில் ஐஸ்லாந்துடன் டிரா, குரோஷியாவுடன் 3க்கு பூஜ்யம் என்று தோல்வி என துவண்டு இருக்கிறார்கள் மெஸ்ஸியும், அர்ஜென்டினா ரசிகர்களும். அர்ஜென்டினா அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் நாளை நடைபெறவுள்ள நைஜீரியா அணியை வீழ்த்தியாக வேண்டும். இப்படியான நெருக்கடி சூழ்நிலையில் இருக்கிறார் மெஸ்ஸி.
சரி, மெஸ்ஸியால் மட்டுமே இதை சாதிக்க முடியுமா ? கால்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, கூடைப்பந்து ஆகியவை தனி நபர் விளையாட்டல்ல. இவை எல்லாம் குழு விளையாட்டு. எல்லா அணியிலும், ஒரு நட்சத்திர வீரர் இருப்பார். அவர் அந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பார். ஆனால், அவரை நம்பி மட்டுமே குழு விளையாட்டு போட்டியில் இருந்துவிட முடியாது.