ஐபிஎல் தொடர்ல 1000 ரன்கள் அடிச்சாலும் விராட் கோலிக்கு இந்திய அணியில் இடம் இல்லை… பிடிவாதத்துடன் இருக்கும் பிசிசிஐ; வெளியான அதிர்ச்சி தகவல் !!

ஐபிஎல் தொடர்ல 1000 ரன்கள் அடிச்சாலும் விராட் கோலிக்கு இந்திய அணியில் இடம் இல்லை… பிடிவாதத்துடன் இருக்கும் பிசிசிஐ; வெளியான அதிர்ச்சி தகவல்

எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடி அதிகமான ரன்கள் குவித்தாலும், அவருக்கு டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காது என்ற தகவல் பிசிசிஐ., வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ளது.

கடந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி இழந்ததில் இருந்து, ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் டி.20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து முழுமையாக புறக்கணிகப்பட்டனர். டி.20 போட்டிகளுக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியாக காயமடைந்துவந்ததால் ரோஹித் சர்மா மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.

ரோஹித் சர்மாவே எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்படுவார் என்பதை பிசிசிஐ., உறுதி செய்தது. ஆனால் விராட் கோலியின் விசயத்தில் பிசிசிஐ., அதிக பிடிவாதத்துடன் இருப்பதாகவும், விராட் கோலியின் பேட்டிங் ஸ்டைல் டி.20 போட்டிகளுக்கு ஒத்துவராது என்ற முடிவுக்கு வந்துவிட்ட பிசிசிஐ., விராட் கோலின் இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு நிச்சயம் இடம் கிடைக்காது என்ற தகவல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி அது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது பிசிசிஐ., வட்டாரத்தில் இருந்து புதிய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பிசிசிஐ., நிர்வாகி ஒருவர் அளித்துள்ள பேட்டியில், “ஐபிஎல் தொடர் முக்கியமானது தான், ஆனால் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., ஏற்கனவே இறுதி செய்துவிட்டது இதனால் ஐபிஎல் தொடரை அடிப்படையாக வைத்து டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பே இல்லை. இதனால் விராட் கோலிக்கும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை, இதில் பிசிசிஐ., தெளிவாக உள்ளது” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.