இந்திய அணியின் முன்னாள் வீரர் தற்கொலை முயற்சி ! ரசிகர்கள் கவலை! 1

மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் தெரிவித்திருப்பது, கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது ஸ்விங் பந்துவீச்சின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் பிகே என அழைக்கப்படும் பிரவீன் குமார். 2007-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான இவர், அதற்கடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் பேங்க் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வெல்வதில் முக்கியப் பங்காற்றியவர். தன்னுடைய துல்லியமான ஸ்விங் பந்துவீச்சின் மூலம், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங் போன்ற ஜாம்பவான்களையே மண்ணைக் கவ்வச்செய்தவர் பிரவீன் குமார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் தற்கொலை முயற்சி ! ரசிகர்கள் கவலை! 2

திறமையான வீரராக இருந்தாலும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார் அவர். வலைப்பயிற்சியின் போது ரோஹித் ஷர்மாவை கிண்டல் செய்த ரசிகர் ஒருவரை, பிரவீன் குமார் ஸ்டம்பை பிடுங்கித் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 2014-ல் இருந்து இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்துவந்த அவர், கடந்த ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். தன்னுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றமும், தனிமையும் அவருக்கு கடுமையான மன உளைச்சலுக்குத் தள்ளியுள்ளது. ஒரு வாழ்ந்து கெட்ட மன்னனைப் போல, தன்னைத் தானே தனிமைச்சிறையில் அடைத்துக்கொண்ட பிரவீன் குமார், தன்னுடைய பழைய பந்துவீச்சு வீடியோக்களைப் பார்த்தபடியே, தனது நாட்களை கடத்தியுள்ளார்.இந்திய அணியின் முன்னாள் வீரர் தற்கொலை முயற்சி ! ரசிகர்கள் கவலை! 3

ஒருகட்டத்தில் மன அழுத்தத்தைப் பொறுக்க முடியாத பிரவீன் குமார், தற்கொலை செய்துகொள்ளத் துணிந்திருக்கிறார். ஆனால் தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பார்த்த அவர், தற்கொலை முடிவைக் கைவிட்டு, மனநல மருத்துவரை அணுகியுள்ளார். தற்போது மன அழுத்தத்தில் இருந்து மீண்டுள்ள பிரவீன் குமார், உத்தரபிரதேச ரஞ்சி கிரிக்கெட் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ளார். மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் அறிவித்திருந்த நிலையில், இப்போது இந்தியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரும் அதுகுறித்து வெளிப்படையாக பேசியிருப்பது, கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *