வீடியோ: ரசிகர்களின் போஸ்டரை பார்த்ததும் ரியாக்சன் கொடுத்த விராட் கோலி

தற்போது இந்திய அணி தென்னாபிரிக்கா அணியுடன் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி ஒருநாள் தொடரில் அட்டகாசமாக விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணியை நசுக்கிய இந்திய அணி, இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் அதே தான் செய்தது.

டாஸ் வென்று முதல் பீல்டிங்கை தேர்வு செய்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. தொடக்கத்தில் இருந்தே தென்னாபிரிக்கா வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள் இந்திய பந்துவீச்சாளர்கள். குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்த்ர சஹால் ஆகியோர் எதிரணி வீரர்களை தனக்கு உணவாக எடுத்து கொண்டார்கள்.

முதலில் விளையாடிய தென்னாபிரிக்கா அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 118 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த தென்னாபிரிக்கா இன்னிங்சின் போது, ஒரு கட்டத்தில் விராட் கோலி பவுண்டரி கோட்டிடம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் விராட் கோலியின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் படி ஒரு பெரிய போஸ்டரை வைத்திருந்தார்கள். அதை பார்த்த கேப்டன் கோலி அற்புதமாக ரியாக்சன் கொடுத்தார்.

அந்த வீடியோவை பாருங்கள்:

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.