உலக கோப்பையில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள், பிரிட்டன் பிரதமர் தெரசா மேயை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
உலகக் கோப்பை தொடரில் பரபரப்பாக நடந்த இறுதி போட்டியில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் மோதின. ’டை’ ஆன இந்தப் போட்டியில், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் டை ஆனதால், புதுமையாக, அதிக பவுண்டரி கள் அடித்த அணி என்ற அடிப்படையில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து உலகக் கோப்பையை, முதன்முறையாக கைப்பற்றியது இங்கிலாந்து அணி.
இதைக் கொண்டாடி வரும் அந்த அணி வீரர்கள், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பிரதமர் தெரசா மேயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். போட்டியில் வென்ற உலக கோப்பையை கையில் ஏந்தியவாறு தெரசா மேவுடன் அப்போது அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்நிலையில் மரியாதை நிமித்தமாக உலக கோப்பை வென்ற உடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவை சந்திக்க இங்கிலாந்து வீரர்கள் சென்றனர். இங்கிலாந்து பிரதமரிடம் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் கோப்பையை காட்டி விவரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அருகில் நின்றிருந்த ஜேசன் ராயை, சோப்ரா ஆச்சர் பின்னாலிருந்து கைவைத்து சேட்டை செய்து கொண்டிருந்தார். உடனே சுதாரித்த ஜேசன் ராய் சிரித்துக்கொண்டே, கொஞ்சம் கைய வச்சுட்டு சும்மா இருடா, பிரதமர் இருக்கிறார் என்பது போல் அவரது கையை பிடித்து அடக்கினார். இந்த நகைப்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
We see you @JofraArcher ? pic.twitter.com/iRMUf1NiMr
— Sky Sports Cricket (@SkyCricket) July 16, 2019