சாம்பியன் ட்ரோபி இறுதி போட்டியில் மழை வந்தால் என்ன ஆகும்

தற்போது இங்கிலாந்தில் சாம்பியன் ட்ரோபி 2017 நடந்து கொண்டு இருக்கிறது இதில் நிறைய போட்டிகள் மழை காரணமாக தடை செய்ய பட்டது, நடந்த 12 போட்டிகளில் 2 போட்டிகள் மழையால் பாதிக்க பட்டு கை விட பட்டது.

இந்த மழை காரணமாக ஆஸ்திரேலியா அணி தான் மிகவும் பாதிக்க பட்டது இதனால் ஆஸ்திரேலியா அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியே சென்றது.இருப்பினும் மழை வந்ததால் தான் வங்கதேசம் அணிக்கு அதிஷ்டம் அடித்து அரையிறுதி போட்டிக்கு சென்றது.

தற்போது சாம்பியன் ட்ரோபி போட்டிகளில் இரண்டு அரையிறுதி போட்டிகள் முடிவடைந்து உள்ளது இதில் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதியது இதில் இலங்கை அணியை பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்றது.

பிறகு இரண்டாவது அரையிறுதி போட்டியில் வங்கதேசம் மற்றும் இந்தியா மோதியது இந்த போட்டியில் வங்கதேசம் அணியை இந்திய அணி சுலபமாக வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்று உள்ளது.

வரும் ஜூன் 18ஆம் தேதிகளில் இந்தியா பாக்கிஸ்தான் அணிகள் இறுதி போட்டியில் மோதுகிறது இந்த போட்டிக்காக ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே காது கொண்டு இருக்கிறார்கள் ஒரு வேலை இந்த போட்டி மழையால் பாதிக்கபட்டால் என்ன ஆகும் என்று தெரியமா.

இரண்டு அணிகளுக்கும் சூப்பர் ஓவர் நடத்தப்படும் அதில் வெற்றி பெரும் அணி தான் சாம்பியன் ட்ரோபி கோப்பையை வெல்லும். சூப்பர் ஓவரும் நடத்த படாமல் மழை தொடர்ந்து வந்தால் இரண்டு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.

இது போன்று தான் 2002ஆம் ஆண்டு நடை பெற்ற சாம்பியன் ட்ரோபி ஆட்டம் பாதிக்க பட்டதால் கோப்பையை இலங்கை அணியும் இந்தியாவும் சரிசமமாக பகிர்ந்து கொண்டார்கள். ஆகவே ஆட்டம் கை விட பட்டால் கோப்பையை இரண்டு அணிகளும் பகிர்ந்து கொள்வார்கள்.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.