வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரே ஒரு டி20 போட்டியில் 190 ரன் அடித்தும் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியையே சந்தித்தது. இந்திய வீரர்களின் மொத்த உழைப்பையும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லெவிஸ் சதம் அடித்து பாழாக்கினார். இதனால் 9 பந்துகள் மீதம் இருக்க ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்திய வீரர்கள் பீல்டிங் சரியாக செய்யாததால், இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது சதம் அடித்தார் எவின் லெவிஸ்.
எவின் லெவிஸ் 46 ரன்னில் இருக்கும் போது அவரது கேட்சை தவறவிட்டனர். அடுத்த ஓவரிலேயே அவருக்கு இன்னொரு உயிர் தந்தார் தினேஷ் கார்த்திக். முதல் முறை பந்து உயரமாக சென்றது, அந்த பந்தை பிடிக்க விராட் கோலி மற்றும் முகமது ஷமி ஆகியோர் ஓடி வந்தனர். ஆனால், இருவரும் சந்தேகத்திலேயே ஓடியாததால், அந்த கேட்சை தவற விட்டனர்.
இரண்டாவது முறை ஈஸியான கேட்சை தினேஷ் கார்த்திக் தவறவிட்டார். அந்த பந்து வருவதை தவறாக கணித்த தினேஷ் கார்த்திக், பந்தை தட்டி பிடிக்கும் போது அந்த பந்து தரையில் பட்டது. இந்த வாய்ப்பை வீணாக்காத லெவிஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தினார்.
இந்த தோல்வியை பற்றி பேசிய தினேஷ் கார்த்திக்,”அவர் சரியாக அடிக்கவில்லை என்றாலும், அது சிக்சருக்கு சென்றது. இத்துடன் நாங்கள் சில கேட்ச்களை தவற விட்டோம். அது போன்ற வாய்ப்புகளை டி20 போட்டிகளில் தவற விட கூடாது. 190 என்பது நல்ல ஸ்கோர் தான். ஆனால், சில கேட்ச்களை தவறவிட்டதால், அதை அவர்கள் பயன்படுத்தி கொண்டார்கள். பவுண்டரியை விட எவின் லெவிஸ் சிக்ஸர்களை அதிகமாக விளாசியுள்ளார்,” என கூறினார்.