நெ.6ல் ரிஷப் பந்த்திற்கு பதில் அஸ்வின் இறங்கலாம்: கும்ளே ஆலோசனை 1

ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நெ.6ல் ரிஷப் பண்டிற்கு பதில் அஸ்வின் இறங்கினால் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளார் முன்னாள் கேப்டன் மற்றும் பயிர்சியாளர் அனில் கும்ளே.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரைக் கைப்பற்ற இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு இருப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

ஆஸ்திரேலிய அணியுடனான தொடர் குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் 35 ஓவர்களை எதிர்கொள்வது மிகவும் சிரமமாக இருக்கும், 350க்கும் அதிகமான ரன்களைக் குவிக்க வேண்டும். அதேபோல் பந்துவீச்சாளர்களும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்து ரன் குவிப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.

நெ.6ல் ரிஷப் பந்த்திற்கு பதில் அஸ்வின் இறங்கலாம்: கும்ளே ஆலோசனை 2

டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரை நம்பியே ஆஸ்திரேலியா அணி இருந்தது. தற்போது அவர்கள் இல்லாததால் அணி பலவீனமாகி உள்ளது. எனவே இந்தத் தொடரை வெல்ல இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு உள்ளது. என்று கூறினார்

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது. கடந்த முறை இந்தியா ஆஸ்திரேலியா சென்றிருந்தபோத விராட் கோலி நான்கு சதங்களுடன் 692 ரன்கள் குவித்திருந்தார். சராசரி 86.50 ஆகும்.

அதன்பின் ரன்மெஷினாக மாறினார். இந்த தொடரிலும் அதிக அளவில் ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்டுகிறது. இந்நிலையில் நான் யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டிய தேவையில்லை என்று கூறியுள்ளார்.நெ.6ல் ரிஷப் பந்த்திற்கு பதில் அஸ்வின் இறங்கலாம்: கும்ளே ஆலோசனை 3

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நீங்கள் விளையாடும்போது ஒவ்வொரு தொடரில் இருந்தும், ஒவ்வொரு போட்டியில் இருந்தும், ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது கற்றுக் கொள்கிறீர்கள். நான் கடந்த முறை இங்கு வந்த பிறகு, தற்போது அதிகப்படியான நம்பிக்கையில் உள்ளேன. நான் யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இருப்பதா உண்மையிலேயே நினைத்தது இல்லை.

அணி என்னிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை செய்வதுதான் முக்கியமானது. என்னால் முடிந்த அளவிற்கு 100 சதவீதம் பங்களிப்பை அளிக்க வேண்டும். இதுதான் அதிகப்படியான செயல்முறை. தற்போது வெளிநாட்டிற்குச் செல்லும்போது அதிக அளவிலான மாறுபட்ட நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும் என்று நினைத்தது கிடையாது. இதைத்தான் கடைபிடித்து வருகிறேன்.நெ.6ல் ரிஷப் பந்த்திற்கு பதில் அஸ்வின் இறங்கலாம்: கும்ளே ஆலோசனை 4

என்னுடைய கிரிக்கெட் கால தொடக்கத்தில், முக்கியமான மைல்கல்லை எட்ட வேண்டும் என்ற நினைப்புள் இருந்தன. ஆனால் தற்போது முழுக்கவனமும் எந்த விலைக்கொடுத்தாவது அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதுதான்’’ என்றார்.

 

 

Rajeshwaran Naveen

Cricket Fan - Dhoni Lover - CSK Forever

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *