வெற்றிக்கு இவர்கள் தான் முக்கிய காரணம்; ரோஹித் சர்மா பாராட்டு !! 1

வெற்றிக்கு இவர்கள் தான் முக்கிய காரணம்; ரோஹித் சர்மா பாராட்டு

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் துபாயில் நேற்று முன்தினம் நடந்த சூப்பர்-4 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடி அசத்தியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்ய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோயிப் மாலிக் 78 ரன்னும், கேப்டன் சர்ப்ராஸ் அகமது 44 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் அதிரடியாக அடித்து ஆடி பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை பதற வைத்ததுடன், அணியை வெற்றிப் பாதையில் அருமையாக அழைத்து சென்றனர். 15-வது சதம் அடித்த ஷிகர் தவான் 100 பந்துகளில் 16 பவுண்டரி, 2 சிக்சருடன் 114 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் சோயிப் மாலிக் பந்து வீச்சில் ஹசன் அலியால் ரன்-அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 33.3 ஓவர்களில் 210 ரன்னாக இருந்தது.

வெற்றிக்கு இவர்கள் தான் முக்கிய காரணம்; ரோஹித் சர்மா பாராட்டு !! 2

அடுத்து அம்பத்தி ராயுடு, ரோகித் சர்மாவுடன் இணைந்தார். இந்த இணை அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. இந்திய அணி 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. 19-வது சதம் கண்ட கேப்டன் ரோகித் சர்மா 119 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 111 ரன்னும், அம்பத்தி ராயுடு 18 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 14 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய வீரர் ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காத இந்திய அணி ‘சூப்பர்-4’ சுற்றில் தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை சாய்த்து இருந்தது. முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்த பாகிஸ்தான் அணி ‘சூப்பர்-4’ சுற்றில் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். வங்காளதேசத்துக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து இந்திய அணி ஒரு ஆட்டம் மீதம் இருக்கையிலேயே இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. லீக் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை பதம் பார்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *