வீடியோ: தனது கனவு வீரன் தோனி தன் அருகில் இருப்பதை பார்த்து உடனடியாக கையெடுத்துக் கும்பிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் பேட்ஸ்மேன்
நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இது லீக் தொடரின் நான்காவது போட்டி. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அபாரமாக வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது
தற்போது இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது இதில் முதலில் பேட்டிங் செய்து 216 குவித்தது. அதன் பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சான்சன் 32 பந்துகளில் 74 ரன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் டுப்லஸ்ஸிஸ் 37 பந்துகளில் 72 ரன்களும் விளாசினர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாம் குர்ரன் 3 விக்கெட் வீழ்த்தி இருந்தார். சான்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது இந்த போட்டிக்கு முன்னதாக வீரர்கள் பலர் மயானத்திற்கு உள்ளே வந்து ஆடுகளத்தை ஆராய்ந்து கொண்டிருந்தனர். அப்போது தோன்றும் முன்னே சென்றார் தோனி உள்ளே சென்றவுடன் அங்கு ஏற்கனவே நின்றிருந்த 19 வயது இளம் வீரர் யாஸ்வி ஜெய்ஸ்வால் தோனியை பார்த்தவுடன் தனது கனவு வீரன் தன் அருகில் நின்று இருப்பதை உணர்ந்து உடனடியாக கையெடுத்துக் கும்பிட்டார்.
தோனி அவரை தன் சகோதரன் போல் மதித்து அவருடன் பிஸ்ட் செய்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். ஆனால் தோனி நடந்த பின்னரும் யாஸ்வி ஜெய்ஸ்வால் டோனியை பார்த்து கையெடுத்து கும்பிட்டு ஆனந்தமாக பார்த்துக்கொண்டிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
— Dhoni Fan (@mscsk7) September 22, 2020
.