இவர்களுக்கும் சாம்பியன்ஸ் டிராபி அணியில் வாய்ப்பு கிடைத்ததா ? ரசிகர்கள் மகிழ்ச்சி

அனைவரும் எதிர் பார்த்து கொண்டு இருக்கும் மினி உலகக்கோப்பை என படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் ஜூன் 1ம் தேதி முதல் 18ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.
பிசிசிஐ-ஐசிசி இடையே வருவாய் பகிர்வு தொடர்பாக மோதல் வெடித்துள்ளதால் இத்தொடரில் இந்தியா பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் எதிர்கால நலன் கருதி இந்திய அணி பங்கேற்கும் என கூறப்படுகிறது. வரும் 7ம் தேதி நடைபெறும் பிசிசிஐ பொதுகுழு கூட்டத்திற்கு பின்னர் இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது.

இந்த 10வது ஐ.பி.எல் தொடரில் கலக்கி கொண்டு இருக்கும் சன்ரைஸ் வீர்களான தவான் மற்றும் புவனேஸ்வர் குமார் வாய்ப்பு கிடைக்கும் என எதிர் பார்க்க படுகிறது.

காயம் காரணமாக கே.எள்.ராகுல் ஓய்வில் இருப்பதால், தொடக்க வீரராக தவான் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்க படுகிறது. இந்த 10வது ஐ.பி.எல் போட்டியில் பந்து விசில் கலக்கி கொண்டு இருக்கும் புவனேஷ்வர் குமாருக்கும் இடம் இருப்பதாக தெரிகிறது.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.