ஜூன் 4 ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இடையிலான மோதலின் போது மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனது கருத்துக்களை அறிமுகப்படுத்த உள்ளார். அவர் ஆகாஷ் சோப்ரா, சுனில் காவாஸ்கர், சபா கரீம் மற்றும் விரேந்தர் சேவாக் ஆகியோருடன் இந்த ஹிந்தி வர்ணனையாளர் குழுவின் பகுதியாக இருப்பார்.
அவர் ஹிந்தி வர்ணனை மட்டும் தான் செய்யவார், ஆங்கில வர்ணனை செய்ய அவரை அழைக்க வில்லை. கிடைத்த தகவலின் படி, அவர் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு மாட்டும் தான் வர்ணனை செய்வார், அதற்கு பிறகு நடக்கும் பிற போட்டிகளுக்கு வர்ணனை செய்ய மாட்டார் என தகவல்கல் வந்துள்ளது.
ஆனால், மீடியாக்கள் இதுவரை பரப்ப வில்லை ஆச்சரியமாக காண்பித்து ரசிகர்களை ஈர்க்க நினைக்கிறார்கள். 2015 உலக கோப்பையின் போதும் திடீரென்று அமிதாப் பச்சனை கூட்டிட்டு வந்து ஆச்சரிய படுத்தினர்.
இந்த சாம்பியன்ஸ் டிராபியில் ஜூன் 4ஆம் தேதி பாகிஸ்தானுடன் இந்தியா மோதவுள்ளது. அதன் பிறகு இலங்கை மற்றும் தென்னாப்ரிக்காவுடன் மோத உள்ளது.