வாங்க தம்பி பேசிகிட்டே போவோம்... விராட் கோலியின் குழந்தைகுக்கு மிரட்டல்விடுத்த முட்டாளை கைது செய்தது காவல்த்துறை !! 1

விராட் கோலியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த நபரை மும்பை போலிஸார் கைது செய்துள்ளனர்.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியிலேயே இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது.

உலகக்கோப்பை தொடர்களில் இதுவரை ஒருமுறை கூட பாகிஸ்தான் அணி, இந்தியாவை வீழ்த்தியது இல்லை என்பதால், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்திய அணியே இம்முறையும் வெற்றி பெறும் என காத்திருந்தனர். ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடுமையாக திணறிய இந்திய அணி, பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

வாங்க தம்பி பேசிகிட்டே போவோம்... விராட் கோலியின் குழந்தைகுக்கு மிரட்டல்விடுத்த முட்டாளை கைது செய்தது காவல்த்துறை !! 2

இந்திய அணியின் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள், சமூக வலைதளம் மூலம் தங்களது வேதனையை நாகரீகமாக வெளிப்படுத்தினர். ஆனால் இது போன்ற ஒரு நேரத்திற்காக காத்திருந்ததை போன்று திடீரென சமூக வலைதளத்தில் புகுந்த ஒரு கூட்டணி, இந்திய வீரர்களையும் அவர்களது குடும்பங்களையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்தனர். அதிலும் குறிப்பாக முகமது ஷமியின் மதத்தை வைத்து அவரையும் அவரது குடும்பத்தையும் மிக மோசமாக விமர்சித்தனர். முகமது ஷமி ஒரு முஸ்லிம் என்பதால் பாகிஸ்தானை வெற்றி பெற வைத்துவிட்டார் என முட்டாள்தனமாக விமர்சித்தனர். முகமது ஷமி எங்கள் சகோதரர் நாங்கள் அனைவரும் முகமது ஷமிக்கு பின்னால் நிற்கிறோம், இந்த முட்டாள்களை பற்றி நாங்கள் ஒரு நிமிடம் கூட யோசிக்க மாட்டோம் என பேசியிருந்த விராட் கோலியையும் விமர்சித்தனர், அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவையும் விமர்சித்தனர், அதோடு இல்லாமல் விராட் கோலி 10 மாத குழந்தைக்கு பாலியல் மிரட்டலும் விடுத்தனர்.

வாங்க தம்பி பேசிகிட்டே போவோம்... விராட் கோலியின் குழந்தைகுக்கு மிரட்டல்விடுத்த முட்டாளை கைது செய்தது காவல்த்துறை !! 3

10 மாத குழந்தைக்கு பகிரங்கமாக பாலியல் மிரட்டல் விடுத்த விவாகரம், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. வெளிநாட்டு வீரர்கள், பிரபலங்கள் உள்பட பலரும் இந்திய சமூக வலைதளங்களில் நிலவி ஆசாதாரண சூழல் குறித்து தங்களது கவலையை வெளிப்படுத்தினர். இது குறித்து பலரும் காவல்த்துறையும் புகாரும் அளித்திருந்தனர்.

வாங்க தம்பி பேசிகிட்டே போவோம்... விராட் கோலியின் குழந்தைகுக்கு மிரட்டல்விடுத்த முட்டாளை கைது செய்தது காவல்த்துறை !! 4

இந்தநிலையில், விராட் கோலியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த 23வயது இளைஞரை மும்பை காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் பாலியல் மிரட்டல் விடுத்த நபர் ஹைதராபாத்தை சேர்ந்த software engineer என்பது தெரியவந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *