2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், அனைத்து அணிகளும் எந்த வீரரை தக்கவைத்து கொள்ளலாம்..?எந்த வீரரை அணியிலிருந்து நீக்கலாம்..? எந்த புதிய வீரர்களை அணியில் இணைக்கலாம்…? என்ற திட்டங்களையும் வியூகங்களையும் வகுத்து வருகிறது.
இந்நிலையில் நடந்து முடிந்த 2021 ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் பெஞ்சில் உட்கார வைத்த 5 வீரர்களுக்கு 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அதிக மவுசு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியில் விளையாட வில்லை என்றாலும் திறமையை கருத்தில் கொண்டு இந்த ஐந்து வீரர்களை ஒவ்வொரு அணியும் தனது அணியில் இணைப்பதற்கு முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படிப்பட்ட 5 வீரர்களை பற்றி இங்கு காண்போம்.
மிச்சல் சாட்டினர்
நியூசிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சாட்டினர் தனது அபாரமான திறமை மூலம் பல முறை தனது அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார், அப்பேர்ப்பட்ட திறமை படைத்த இவரை 2021 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு போட்டியில் கூட விளையாடுவதற்கு பயன்படுத்தவில்லை.
இருந்த போதும் வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
