3. சச்சின் டெண்டுள்கரின் 100ஆவது சதம்
கிட்ட தட்ட 20 வருடங்களுக்கும் மேல் ஆடியாகிவிட்டது இந்தியாவிற்க்காக. ஆனலும் அந்த 100 சதம் அடித்தே ஆக வேண்டும் என காத்துக்கிடந்தவர் சச்சின் டெண்டுல்கர். 2011 உலககோப்பையில் தென்னாப்பிரிகாவிற்க்கு எதிராக 99 சதம் பூர்த்தியாகிவிட்டது. அடுத்த சதம் எப்போது அடிப்பார் என ஆவ்லுடன் அவரது ரசிகர்களும் அடுத்த சதம் அடிக்க கிட்ட தட்ட 1 வருடம் ஆகி விட்டது என அவரை ஓய்வு பெற சொல்ல கிரிக்கெட் விமர்சகர்களும் காத்திருந்த காலம் அது.
ஆசிய கோப்பை போட்டியில் வங்க தேசத்திற்கு எதிராக அந்த 100வது சதத்தை அடித்து தலைகவசத்திற்க்கு முத்தமும் கொடுத்தாகிவிட்டது.ஆனாலும் அணிக்கு அந்த 100ஆவது சதத்தினால் என்ன பயண். ஒன்றுமில்லை என தான் கூற வேண்டும். ஆம், 138 பந்துகளுக்கு அடித்த அந்த சதம் இந்தியாவிற்க்கு வெற்றியை தேடி தரவில்லை.வங்க தேச அணி 5 விக்கெட் வித்யாசத்தில் அந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது.