நாம் சிறுவயதில் உண்மை என்று நம்பிய 5 கட்டுக்கதைகள் பற்றி இங்கு காண்போம்.
உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற போட்டிகளில் கிரிக்கெட் போட்டியும் ஒன்று, உலகின் பல நாடுகளில் இருந்தும் கிரிக்கெட் போட்டிக்கான தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
கிரிக்கெட் போட்டியில் சர்ச்சைகளுக்கும் குழப்பங்களுக்கு பஞ்சமே இருக்காது,இன்னும் சொல்லப்போனால் கிரிக்கெட் போட்டியாழ் ரசிகர்கள் இருதரப்பினர்களுக்கும் இடையே மிகப்பெரும் மோதல்களும் வரலாற்றில் ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட் அதிக நபர்களால் கவனிக்கப்படும் போட்டியாக இருப்பதால் அதில் கட்டுக்கதைகளும் அவ்வப்போது ஏற்படுவது உண்டு, இந்நிலையில் நாம் சிறுவயதில் உண்மை என்று நம்பி ஆச்சரியப்பட்ட 5 கட்டுக்கதைகள் பற்றி இங்கு காண்போம்.
1, நடுவரை ஸ்டம்பாள் குத்திய நவ்ஜோத் சிங் சித்து
57 வயது ஆகும் வயதாகும் நவ்ஜோத் சிங் சித்து இந்தியாவில் முன்னாள் வீரர் சிறந்த வர்ணனையாளர் மற்றும் அரசியல் போன்ற பன்முக தன்மை கொண்ட ஒரு நபர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்காற்றிய என்று தன்னைப்பற்றி பரப்பப்பட்ட ஒரு கட்டுக் கதையை பற்றி பகிர்ந்து கொண்டார்.
இந்திய அணியின் துவக்க வீரராக செயல்பட்ட இந்திய அணிக்காக 51 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 136 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று அணிக்காக சிறப்பாக விளையாடி உள்ளார். இந்நிலையில் 1996 ஆம் ஆண்டு சார்ஜா கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியின் சுகைலுக்கும் இந்திய அணியின் துவக்க வீரர் சித்துவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இந்நிலையில் அதை கள நடுவர் தலையிட்டு தீர்த்து வைத்தார். ஆனால் அன்று இந்திய அணியின் துவக்க வீரர் நவ்ஜோத் சிங் சித்து களநடுவரை ஸ்டம்பால் குத்தி விட்டார் என்ற பொய் செய்தி மக்களிடத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.