அடுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி  பெற்றது ஆஃப்கானிஸ்தான் !! 1

அடுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி  பெற்றது ஆஃப்கானிஸ்தான்

2019ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு விண்டீஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளது.

2019-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்சில் நடைபெற உள்ளது. மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இங்கிலாந்து அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது.

இதில் எஞ்சியிருக்கும் இரண்டு இடங்களுக்கான தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் அயர்லாந்து, விண்டீஸ், ஆஃப்கானிஸ்தான், நேபாள் உள்ளிட்ட  அணிகள் பங்கேற்றன.

அடுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி  பெற்றது ஆஃப்கானிஸ்தான் !! 2

இதில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி விண்டீஸ் அணி ஏற்கனவே உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், இன்று ஆஃப்கானிஸ்தான் அயர்லாந்து இடையேயான போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்கு பவுல் ஸ்டெர்லிங் 55 ரன்களும், கெவின் ஓ பிரைன் 41 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த அயர்லாந்து அணி 209 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு, அந்த அணியின் துவக்க வீரர்களான முகமது ஷெஜாத் 54 ரன்களும், நைப் 45 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.

அடுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி  பெற்றது ஆஃப்கானிஸ்தான் !! 3

இதன் பின் அடுத்தடுத்து வந்த வீரர்களும் தங்கள் பங்கை சரியாக செய்ததன் மூலம் 49.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்த ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் விண்டீஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *