ஆஃப்காணிஸ்தான் அணியின் கேப்டனானார் ரசீத் கான்…உலகின் இளம் கேப்டன் !! 1
ஆஃப்காணிஸ்தான் அணியின் கேப்டனானார் ரசீத் கான்…உலகின் இளம் கேப்டன்

 ஆஃப்காணிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அந்த அணியின் சுழற்பந்து விச்சாளர் ரசீத் கான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 ரஷீத் கான் என்ற இளம் மற்றும் திறமை வாய்ந்த பவுலரால் ஆப்கானிஸ்தான் அணி குறித்து உலகமே கேள்விப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 19 வயதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நம்பர் 1 என்ற பவுலர் என்ற பெருமை பெற்றுள்ளார். இளம் வயதில் பவுலிங்கில் நம்பர் 1 என்ற பெருமை பெற்ற நிலையில், அவரின் திறமையால் அவருக்கு அணியின் கேப்டன் பொறுப்பு தேடி வந்துள்ளது.

ஆஃப்காணிஸ்தான் அணியின் கேப்டனானார் ரசீத் கான்…உலகின் இளம் கேப்டன் !! 2

அந்நாட்டு கேப்டனாக தற்போது செயல்பட்டு வரும் அஸ்கர் ஸ்டானிக்ஜாய் குடலிறக்க நோயால் அவதிப்பட்டு வருகின்றார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சாதாரண நிலைக்கு வர 10நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஆப்கான் அணி மார்ச் 4ம் தேதி ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. அதனால் ஆப்கான் அணிக்கு ரசீத் கான் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஃப்காணிஸ்தான் அணியின் கேப்டனானார் ரசீத் கான்…உலகின் இளம் கேப்டன் !! 3

ஐ.பி.எல் தொடரிலும் கடந்த வருடம் விளையாடி ஐ.பி.எல் தொடரில் கால் வைத்த முதல் ஆஃப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றிருந்த ரசீத் கானை, இந்த வருடத்திற்கான தொடரிலும் வேறு அணிக்கு விட்டு கொடுக்க மணமில்லாமல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடும் போட்டிக்கு பின் தனது அணியில் மீண்டும் எடுத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *