இந்தியாவ பார்த்து கத்துக்கங்கடா; சோயிப் அக்தர் காட்டம் !! 1

இந்தியாவ பார்த்து கத்துக்கங்கடா; சோயிப் அக்தர் காட்டம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டை மேம்படுத்த நேர்மையான, திறமையான நபர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமிக்க மறுக்கிறது என்ற மாபெரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் ஷோயப் அக்தர்.

இதுகுறித்து பேசியுள்ள அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் எலைட் கிளாஸ், அவர்களுக்கு கீழ் தலையாட்டும் பொம்மைகளைத்தான் வைத்துக்கொள்ள விரும்புகிறது. ஏனென்றால், அப்படிப்பட்டர் நபர்களை தங்களுக்கு கீழ் வைத்துக்கொண்டால்தான், தாங்கள் சொல்லும் அனைத்தையும் கேட்பார்கள் என்பதற்காக… எதிர்த்து பேசாத கிரிக்கெட் வாரிய தலைவர், எதையும் எளிதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய கேப்டன், இப்படியான நபர்கள் தான் அவர்களுக்கு தேவை.

இந்தியாவ பார்த்து கத்துக்கங்கடா; சோயிப் அக்தர் காட்டம் !! 2
Former cricketer Sourav Ganguly, newly-elected president of the Board of Control for Cricket in India (BCCI), speaks during a press conference at the BCCI headquarters in Mumbai on October 23, 2019. – Former captain Sourav Ganguly was unanimously elected on October 23 as president of India’s troubled cricket board, the sport’s most powerful body. (Photo by Punit PARANJPE / AFP) (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

இந்தியாவில் பாருங்கள்.. பிசிசிஐ-யின் தலைவராக கங்குலி இருக்கிறார். தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் இருக்கிறார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரிய இயக்குநராக ஸ்மித்தும் அணியின் தலைமை பயிற்சியாளராக மார்க் பவுச்சரும் இருக்கிறார்கள். இப்படியான நபர்களை நியமித்தால்தான் கிரிக்கெட் வளரும், அணி மேம்படும். பாகிஸ்தானில் அதற்கு நேர்மாறாக நடந்துகொண்டிருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னையெல்லாம் பயன்படுத்திக்கொள்ள மறுக்கிறது. டிவியில் உட்கார்ந்துகொண்டு கமெண்ட்ரி செய்வது எனது பணியல்ல என்று அக்தர் காட்டமாக பேசியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *