சாம்பியன் ட்ரோபி இறுதி போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளது ஜூன் 18ஆம் தேதியில் மதியம் 3 மணி அளவில் போட்டிகள் நடைபெறும்.இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் வேக பந்து வீச்சாளர் அமீர் விளையாடுவாரா என்று கேள்வி குறையாக இருந்தது ஆனால் இப்பொழுது அவர் உடல் தகுதியுடன் உள்ளார் இதனால் இறுதி போட்டியில் விளையாட தயாராக உள்ளார் என செய்திகள் வந்து உள்ளது.
பாகிஸ்தான் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் அஸ்ஹர் மஹ்மூத், “அமீர் இந்தியா பாகிஸ்தான் விளையாடும் இறுதி போட்டியில் விளையாட தகுதியுடையவர்” என்று கூறினார்.
பாகிஸ்தான் அணியின் வேக பந்து வீச்சாளர் அமீர் சாம்பியன் ட்ரோபியில் நடந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாட வில்லை ஆனால் பாகிஸ்தான் இலங்கை அணிகள் மோதிய போட்டியில் அவர் சிறப்பாக செயல் பட்டார். இலங்கை உடன் நடந்த பொடியில் அமீர் 2 52 ரன்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றினார், அதே போல் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடி 28 ரன்கள் எடுத்தார்.அவரின் 28 ரன்கள் பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டிக்கு செல்ல உதவியது.
“இறுதி போட்டியில் விளையாடும் அணிகள் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உடன் தான் செல்ல வேண்டும்.ஆனால் அமீர் அதிக போட்டிகள் விளையாட விட்டாலும் அவர் தற்போது நல்ல நிலைமையில் இருக்கிறார்” என்று முகமத் கூறினார்.
அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகள் மோதியது இதில் அமீர் விளையாட வில்லை அவருக்கு பதிலாக ரும்மன் ரைஸ் விளையாடினார்.இங்கிலாந்து இடம் அரையிறுதி போட்டியில் ரைஸ் சிறப்பாக விளையாடி அனைவரையும் ஆச்சிரியம் பட வைத்தார்.
“இறுதி போட்டியில் யார் விளையாடுவார் என்று பார்ப்போம் – ரம்மான் ரைஸ் அல்லது அமீர்”
அமீர் பாகிஸ்தான் அணிக்காக இது வரை 47 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிட்ட தக்கது.