Cricket, India, Yuvraj Singh, Anshuman gaekwad

இந்திய அணிக்காக விளையாடிய சிறந்த வீரர்களில் யுவராஜ் சிங் ஒருவர் என்று அனைவருக்குமே தெரியும். இந்திய அணிக்காக அவர் பல போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். 2007 மற்றும் 2011 உலககோப்பையில் சில முக்கிய பகுதிகளில் சிறப்பாக விளையாடியவர் தான் யுவராஜ் சிங்.

பெங்களூரில் நடந்த யோ-யோ தேர்வில் பெய்ல் ஆனார் யுவராஜ் சிங், இதனால் அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஆனால், உள்ளூர் போட்டிகளில் யுவராஜ் சிறப்பாக விளையாடினால் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்கலாம் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கேக்வாட் கூறினார்.

“இந்த கிரிக்கெட் உலகத்தில் உடல்தகுதி மிகவும் முக்கியம் ஆகி விற்றது. யோ-யோ தேர்வில் யுவராஜ் சிங் பெய்ல் ஆக காரணம் தெரியவில்லை. அவரை விட பெரியவர் ஆஷிஷ் நேர பாஸ் ஆகும் போது, யுவராஜ் எப்படி பெய்ல் ஆவார்,” என கேக்வாட் கூறினார்.

இரண்டு முறை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேக்வாட், யுவராஜ் தேர்வாகாததற்கு உடல்தகுதி மட்டுமே காரணம் இல்லை. உள்ளூர் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி பெரிய ஸ்கோர் அடித்தால் அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார்.

“தற்போது இந்திய அணி செட்டில் ஆகி விட்டது. சிறப்பாக விளையாடி வரும் ரஹானேவே அணியில் இல்லை. அணி அந்த அளவிற்கு பலமாக இருக்கிறது. யோ-யோ டெஸ்டில் பாஸ் ஆனால் கூட யுவராஜ் அணியில் இடம் பெற காத்திருக்கவேண்டும். அவர் உள்ளூர் போட்டிகளில் பெரிய ஸ்கோர் அடித்தால் அணியில் இடம் பெறுவார்,” என கேக்வாட் தெரிவித்தார்.

ரஞ்சி கோப்பை முதல் போட்டியில் யுவராஜ் சிங் விளையாடவில்லை ஆனால் இரண்டாவது போட்டியில் விளையாட வாய்ப்பிருக்கிறது. இந்த மாதத்தின் இறுதியில் நியூஸிலாந்துடன் இந்தியா மோதுகிறது, அதற்கு முன்பு ரஞ்சி கோப்பையில் யுவராஜ் சிங் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *