கனவுல கூட இப்படிப்பட்ட அணியாக சிஎஸ்கே வரமுடியாது... இந்த அணிக்குள் வந்தாலே எல்லாரும் சூப்பராக பண்ணுவாங்க, அது சிஎஸ்கே இல்லைங்க - புகழ்ந்து தள்ளும் முன்னாள் வீரர்! 1

சிஎஸ்கே இல்லை. இந்த அணிக்குள் சென்றாலே நாம் பலம் மிக்க அணிக்குள் வந்திருக்கிறோம் என்பதை உணர்வார்கள். அதைப்பொறுத்து சிறப்பாக செயல்படுவார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர்.

ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த வருட ஐபிஎல் சீசனில் பத்தாவது முறையாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

கனவுல கூட இப்படிப்பட்ட அணியாக சிஎஸ்கே வரமுடியாது... இந்த அணிக்குள் வந்தாலே எல்லாரும் சூப்பராக பண்ணுவாங்க, அது சிஎஸ்கே இல்லைங்க - புகழ்ந்து தள்ளும் முன்னாள் வீரர்! 2

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆரம்பத்தில் பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்திலும் பிரச்சனை இருந்தாலும், நடுவில் தங்களது பேட்டிங் பலம் என்னவென்று அறிந்து அதற்கு ஏற்றவாறு பிளேயிங் லெவனுடன் வந்தார்கள். 200 பிளஸ் ஸ்கோர்களை தொடர்ச்சியாக சேஸ் செய்துள்ளார்கள். கடைசி கட்டத்தில் பந்துவீச்சிலும் அபாரமாக செயல்பட்டு வந்திருக்கிறார்கள்.

குறிப்பாக ஆச்சர், பும்ரா போன்றோர் இல்லாதபோது இளம் பந்துவீச்சாளர்கள் ஆகாஷ் மதுவால் வேகப்பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். சுழற்பந்துவீச்சில் கார்த்திகேயா, ஷோகீன் போன்ற சில இளம் ஸ்பின்னர்கள் நன்றாக செயல்பட்டு இருக்கிறார்கள். பியூஸ் சாவ்லா போன்றோர் கிட்டத்தட்ட ஓய்வு பெறும் தருவாய்க்கு வந்து, அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டு நன்றாக செயல்பட்டு இருக்கிறார்.

கனவுல கூட இப்படிப்பட்ட அணியாக சிஎஸ்கே வரமுடியாது... இந்த அணிக்குள் வந்தாலே எல்லாரும் சூப்பராக பண்ணுவாங்க, அது சிஎஸ்கே இல்லைங்க - புகழ்ந்து தள்ளும் முன்னாள் வீரர்! 3

இதற்கெல்லாம் அணியில் நிலவிவரும் சூழல் காரணமாக அவர்களால் இப்படி செயல்பட முடிகிறது என்று தனது கருத்தை முன் வைத்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர்.

“இப்போது இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியை பார்க்கும் பொழுது 70களில் வெஸ்ட் இண்டீஸ் அணி அதன் பிறகு ஆஸ்திரேலியா அணி பெற்றிருந்த கம்பீரத்தை கொண்டிருக்கிறது. அப்போது ட்ரெஸ்ஸிங் ரூமில் தொடர்ந்து வெற்றியின் அனுபவம் இருந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு அனுபவம் இப்போது இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் இருப்பதாக தெரிகிறது.

புதிய வீரர்கள் அல்லது இளம் வீரர்கள் உள்ளே வரும் பொழுது பலமிக்க ஒரு அணியில் இருக்கிறோம் என்பதை உணரும் அளவிற்கு அங்கே சூழல் நிலவுகிறது. இங்கு யார் கேப்டன்? யார் சீனியர் வீரர்? என்பதெல்லாம் பொருட்டே இல்லாமல் இளம் வீரர்கள் இறங்குகிறார்கள். அபாரமாக இணைந்து செயல்படுகிறார்கள்.

கனவுல கூட இப்படிப்பட்ட அணியாக சிஎஸ்கே வரமுடியாது... இந்த அணிக்குள் வந்தாலே எல்லாரும் சூப்பராக பண்ணுவாங்க, அது சிஎஸ்கே இல்லைங்க - புகழ்ந்து தள்ளும் முன்னாள் வீரர்! 4

இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி சிறந்த பேட்டிங் கொண்டிருக்கிறது என்பதை பார்த்தோம். ஆனால் அவர்களிடம் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் சாவ்லா இருக்கிறார். அவர் தொடர் முழுவதும் நம்பிக்கை கொடுக்கும் விதமாக செயல்பட்டிருக்கிறார்.

சில இளம் பந்துவீச்சாளர்கள் ஆர்ச்சர் மற்றும் பும்ரா போன்றோர் இல்லாதபோது, அந்த இடத்தை நிரப்பும் அளவிற்கு செயல்பட்டு கொடுத்திருக்கிறார்கள். பவர்-பிளே ஓவர்களில் பெஹரேண்டாப் தொடர்ச்சியாக விக்கெட் எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

கனவுல கூட இப்படிப்பட்ட அணியாக சிஎஸ்கே வரமுடியாது... இந்த அணிக்குள் வந்தாலே எல்லாரும் சூப்பராக பண்ணுவாங்க, அது சிஎஸ்கே இல்லைங்க - புகழ்ந்து தள்ளும் முன்னாள் வீரர்! 5

சிஎஸ்கே ஆர்சிபி போன்ற அணிகளில் இளம் வீரர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? எப்படி செயல்படுகிறார்கள்? என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இளம் வீரர்கள் திலக் வர்மா, நேஹல் வதேரா போன்றோர் சீனியர் வீரர்களை விட பொறுப்புடன் விளையாடி வெற்றி பெற்றுக் கொடுக்கிறார்கள் என்பதையும் பார்த்திருக்கிறோம். இந்த விஷயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்ற அணிகளைவிட முன்னிலையில் இருக்கிறது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *