டி20 தொடரில் ஆட ஏலத்தில் வருகிறார் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்!! 1

அர்ஜுன் டெண்டுல்கர், பழம்பெரும் பேட்ஸ்மேனாக சச்சின் டெண்டுல்கர் மகன், மும்பை டி20 லீக் போட்டிக்கான ஏலம் நடைபெற இருக்கிறது அதில் அர்ஜுன் இடம்பெறுகிறார்.

மும்பை T20 லீக் ஏலம் ஒரு சில வாரங்களில் நடைபெறும். இதற்கிடையில் அர்ஜூன் டெண்டுல்கர் சமீப காலங்களில் நல்ல பார்மில் உள்ளார், மேலும் அவர் தனது திறனை அடுத்த கட்டத்தில் தொடர விரும்புகிறார்.

அர்ஜூன் டெண்டுல்கர் ஆல்-ரவுண்டர், டி.ஆர்.ஏ. பாட்டீல் டி20 தொடரில் தனது திறமையை வெளிப்படுத்தியதால் மும்பை அணியின் அண்டர் 23யில் இடம்பெற்றார். உண்மையில், அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்கான அண்டர்-14, அண்டர்-16 மற்றும் அண்டர்-19 ஆகிய அணிகளில் விளையாடினார்.

அர்ஜூன் டெண்டுல்கர்

மேலும், இலங்கையின் சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் அண்டர் -19 அணிக்கு ஆல்ரவுண்டராக அர்ஜுனையும் தேர்வு செய்தனர். ஜூனியர் டெண்டுல்கர் இலங்கை சுற்றுப்பயணத்தின் இரண்டு நான்கு நாள் போட்டிகளில் ஒருபகுதியாக இருந்தார்.

எனினும், அவர் பேட் மற்றும் பந்தில் பெரிதும் ஈர்க்க முடியவில்லை. 19வயதான மெகாஸ்டார் மகன் இரண்டு நான்கு நாள் ஆட்டங்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமேஎடுத்திருந்தார். மேலும், அவர் இரண்டு இன்னிங்ஸில் 32 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனவே, மும்பை டி 20 லீக்கில் தனது பெயரை முற்றிலும் மாற்ற விரும்புகிறார்.

அர்ஜூன் டெண்டுல்கர்

இதற்கிடையில், அர்ஜுன் டெண்டுல்கர் வேகத்தை சுமார் 135 கிமீ அளவிற்கு வீசும் திறனைக் கொண்டிருக்கிறார். டெண்டுல்கர் தனது பந்துவீச்சு திறன்களை பலப்படுத்த விரும்புகிறார் மற்றும் அவர் தனது விளையாட்டை மேம்படுத்தஇது உதவும் என்கிறார்.

மறுபுறம், மும்பை டி20 லீக் இந்திய பிரீமியர் லீக் முடிந்த பிறகு தொடங்கும். ஐபிஎல் போட்டிகள் மே மாதம் முதல் இரண்டு வாரங்களில் முடிவடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக வீரர்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை டி20 லீக்கில் தனது ஆதிக்கத்தை செலுத்தும் பொருட்டு ஆல்-ரவுண்டர் அர்ஜுன் தன்னை நிரூபிப்பார்.

உண்மையில், டெண்டுல்கர் இன்னும் தேசிய அணிக்கு செல்ல நிறைய வேலை செய்ய வேண்டி இருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *