ரவிச்சந்திர அஸ்வின்;
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வந்த ரவிச்சந்திர அஸ்வினுக்கு இந்திய அணி திடீரென முக்கியத்துவம் கொடுத்து வருவது குழுப்பத்தை மட்டுமே ஏற்படுத்தி வருகிறது. 2022ம் ஆண்டில் மொத்தம் 3 சர்வதேச டி.20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ரவிச்சந்திர அஸ்வின் அதில் வெறும் 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். ரவிச்சந்திர அஸ்வின் அதிக அனுபவமுடைய வீரர் தான் என்றாலும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக டி.20 போட்டிகளில் விளையாடாத ஒருவரை திடீரென அணியில் எடுத்திருப்பது ஏற்புடையதா என தெரியவில்லை. அஸ்வின் இந்த தொடரிலாவது தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்க வேண்டும், இல்லையெனில் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.