ஆசிய கோப்பை 2022; இலங்கைக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது ஆஃப்கானிஸ்தான் !! 1

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று துவங்கியுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும், இலங்கை அணியும் பலப்பரீட்சை செய்கின்றன.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆசிய கோப்பை 2022; இலங்கைக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது ஆஃப்கானிஸ்தான் !! 2

இந்த போட்டிக்கான இலங்கை அணியின் ஆடும் லெவனில் இரண்டு அறிமுக வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. தில்சன் மதுசனாகா மற்றும் மத்தீஷா பத்திரானா ஆகியோருக்கு முதன்முறையாக இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆறு பேட்ஸ்மேன்கள், இரண்டு ஆல் ரவுண்டர்கள் மற்றும் மூன்று பந்துவீச்சாளர்களுடன் இலங்கை அணி இந்த போட்டியை எதிர்கொள்கிறது.

அதே போல் இந்த போட்டிக்கான ஆஃப்கானிஸ்தான் அணியில் ஹசரத்துல்லாஹ் ஜாசை, இப்ராஹிம் ஜார்டன், ரசீத் கான், நவீன் உல் ஹக் போன்ற நட்சத்திர வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர்.

ஆஃப்கானிஸ்தான் அணியின் ஆடும் லெவன்;

ஹஸ்ரத்துல்லாஹ் ஜாசை, ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ், இப்ராஹிம் ஜார்டன், கரீம் ஜனத், நஜிபுல்லாஹ் ஜார்டன், முகமது நபி, ரசீத் கான், அஸ்மத்துல்லாஹ் ஒமர்ஜாய், நவீன் உல் ஹக், முஜீபுர் ரஹ்மான், ஃபாரூகி.

இலங்கை அணியின் ஆடும் லெவன்;

தனுஸ்கா குணதிலகா, பதும் நிஷான்கா, குஷால் மெண்டிஸ், சாரித் அஸ்லன்கா, பனுகா ராஜபக்சே, தசுன் ஷனாகா, வானிது ஹசரங்கா, சமீகா கருணாரத்னே, மகேஷ் தீக்‌ஷன்னா, தில்ஷன் மதுசனாகா, மத்தீஷா பத்திரானா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *