Bangladesh, Sujam Mohammad, BCB, Cricket

சமீபத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெறும் 4 பந்துகளில் 92 ரன் வாரி வழங்கி கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஊட்டிய வங்கதேச வீரர் மஹ்மூத் 10 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.

வங்கதேச தலைநகரான தாக்காவில் நடைபெற்ற இரண்டாம் டிவிசன் கிரிக்கெட் லீக் போட்டியில் லால்மதியா மற்றும் ஆக்ஷியாம் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லால்மதியா அணி 88 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

89 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆக்ஷியாம் அணிக்கு வேளை வைக்காமல், முதல் ஓவருலேயே 15 நோ-பால், 13 வைட்-பவுண்டரிகள் உட்பட 65 ரன்களும், சரியாக வீசிய 4 பந்துகளில் 12 ரன்கள் என நான்கு பந்துகளில் 92 ரன்கள் வாரி கொடுத்தார் சுஜாம் முகமது.

இதனால் கிரிக்கெட் விதிமுறைபடி 4 பந்துகளில் 92 கொடுத்த சுஜாம் முகமதை 10 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.

அதேபோல் லால்மதியா அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு 5 ஆண்டு தடையும், அந்த போட்டியின் நடுவருக்கு 6 மாத கால தடையும் விதிக்கப்பட்டது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *