டி20 அணியில் மீண்டும் இடம் பிடித்தார் சுரேஷ் ரெய்னா

தென்னாபிரிக்கா அணியுடன் விளையாடவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

பிட்னஸ் மற்றும் பார்ம் இல்லாத காரணத்தினால் அவரை இந்திய அணியில் சேர்ப்பதில்லை. அவர் கடைசியாக 2017ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடினார். அதன் பிறகு அவர் ஐபில் தொடரில் சிறப்பாக விளையாடினாலும், உள்ளோர் போட்டிகளில் சொதப்பினார்.

2017ஆம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை தொடரிலும் அவர் சொற்ப ரன்களில் அவுட் ஆகி அனைவர்க்கும் ஏமாற்றத்தை கொடுத்தார். இந்திய கிரிக்கெட் வாரியம் வைத்திருக்கும் யோ-யோ டெஸ்டில் பாஸ் ஆன சுரேஷ் ரெய்னா, சையத் முஷ்டாக் அலி டிராபியில் தான் யார் நிரூபித்து, இந்திய அணியின் தேர்வாளர்கள் கதவை தட்டினார்.

However, Raina found his mojo back on Monday (January 22) and blew away Bengal with an unbeaten whirlwind knock of 126.

சமீபத்தில் முடிந்த சையத் முஷ்டாக் அலி டிராபியில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் சதம், அரைசதம் என் விளாசி அசத்தினார். முக்கிய தொடருக்கு முன்பு அவர் பார்முக்கு வந்ததால், தென்னாபிரிக்கா தொடருக்கு அனுபவம் வாய்ந்த சுரேஷ் ரெய்னாவை தேர்வு செய்துள்ளார்கள்.

இந்திய அணியின் வேறு எந்த மாற்றமும் இல்லை. கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்கள்களாக ஜெயதேவ் உனட்கட் மற்றும் ஷரதுல் தாகூரை தேர்வு செய்துள்ளார்கள். வழக்கம் போல் கேப்டனாக விராட் கோலி செயல் படுவார்.

தென்னாபிரிக்கா டி20 தொடருக்கான இந்திய அணி:

https://mobile.twitter.com/BCCI/status/957492388590600192

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.