பிசிசிஐ-க்கு வந்த பெரும் தலைவலி; ஐபிஎல் தொடருக்கு வந்த புதிய சிக்கல்? புலம்பும் கங்குலி! 1

பிசிசிஐ-க்கு வந்த பெரும் தலைவலி; ஐபிஎல் தொடருக்கு வந்த புதிய சிக்கல்? புலம்பும் கங்குலி!

டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்த விவோ நிறுவனம் விலகியதால் பிசிசிஐக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் புலம்பியிருக்கிறார் அதன் தலைவர் சவுரவ் கங்குலி.

இந்தியா மற்றும் சீனா இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்சனை காரணமாக இந்தியாவில் சீன தயாரிப்புகள் பலவற்றிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 100க்கும் மேலான சீன செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

பிசிசிஐ-க்கு வந்த பெரும் தலைவலி; ஐபிஎல் தொடருக்கு வந்த புதிய சிக்கல்? புலம்பும் கங்குலி! 2
IPL Trophy during the Vivo Indian Premier League 2018 (IPL 2018) qualifier 2 match between the Sunrisers Hyderabad and the Kolkata Knight Riders held at the Eden Gardens Cricket Stadium in Kolkata on the 25th May 2018.
Photo by: Deepak Malik /SPORTZPICS for BCCI

இதற்கு ஆதரவு தெரிவித்து இந்தியர்கள் பலர் மீதமிருக்கும் சீன தயாரிப்புகளையும் இந்தியாவில் புறக்கணித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக இருந்துவந்த விவோ நிறுவனம் சீனாவை தலைமையிடமாகக் கொண்டிருக்கிறது. இதனால் அதையும் புறக்கணிக்க கோரி பிசிசிஐ தரப்பிற்கும் ஐபிஎல் நிர்வாகத்திற்கும் ரசிகர்கள் பலர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

பிசிசிஐ-க்கு வந்த பெரும் தலைவலி; ஐபிஎல் தொடருக்கு வந்த புதிய சிக்கல்? புலம்பும் கங்குலி! 3

இதன் நடுவே திடீரென விவோ நிறுவனம் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது. இந்த திடீர் விலகலால் பிசிசிஐக்கு சுமார் 400 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஐபிஎல் தொடர் நடத்துவதில் ஏதேனும் சிக்கல் இருக்கின்றதா? என கேள்விகள் எழுப்பப்பட்டது.

இதுகுறித்து சமீபத்திய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார் அதன் தலைவர் சௌரவ் கங்குலி. அவர் அளித்த பேட்டியில்,

பிசிசிஐ-க்கு வந்த பெரும் தலைவலி; ஐபிஎல் தொடருக்கு வந்த புதிய சிக்கல்? புலம்பும் கங்குலி! 4

“விவோ நிறுவனத்தின் விலகலால்  நான் இதை நிதி நெருக்கடி என்று கூற மாட்டேன். பிசிசிஐ அமைப்பு தொழில் ரீதியாக வலுவாக இருக்கிறது ஆதலால் இந்த சிறிய இழப்பீட்டை விரைவில் சரி செய்வதற்கு வேறு ஒரு மார்க்கத்தை கண்டறிவோம்.
எந்த ஒரு பெரிய நிகழ்வும் ஒரே நாள் இரவில் வந்து விடாது. வந்தவை அனைத்தும் ஒரே இரவில் சென்று விடாது. பிசிசிஐ வலிமையான பவுன்டேசன் கொண்டது. கடந்தகாலத்தில் இருந்தவர்கள் இதனை மிகவும் வலிமையாக உருவாக்கி வைத்துள்ளார்கள். பிசிசிஐ இதுபோன்ற சிக்கல்களையும் சமாளித்து சொற்களிலிருந்து விரைவில் மீண்டு வரும்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *