- இந்திய அணி 226 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி ஆடிக்கொண்டிருந்தது. பின்னர் ஜோய் சேர்ந்த ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் ஒரளவிற்க்கு அணியைக்க் கரை சேர்க்கப் பாடு பட்டு வந்தனர்.

அப்பொது, 46 ஆவது ஓவரின் 4 ஆவது பந்தை வீசினார் கூல்டர் நைல் அந்த பந்தை நேராக திருப்பி மிக வேகமாக அடித்தார் புவனீஷ்வர் குமார்.
https://twitter.com/84107010ghwj/status/910831565273423872
பந்து நேராக சென்று பாண்டியாவின் தலையில் பலமாக தாக்கியது. உடனடியாக ஆஸ்திரேலியா வீரர்கள் ஸ்மித்,வார்னர் வந்து பாண்டியாவிற்க்கு உதவி செய்தனர்.
சில நொடிகளிலேயே பாண்டிய எழுந்தார். அவர் எழுந்தகுஅட்ன் மைதானத்தில் உள்ள ரசிகர்கள் பாண்டியாவிற்கு அற்புதமான ஒரு கரவொலியை எழுப்பினர்.

இந்த காட்சி பார்க்க பதபதைப்பதாக இருந்தாலும் ஆஸ்திரேலிய வீரர்கள் வந்து உதவியது கிரிக்கெட் ஒரு ஜென்டில் மேன் விளையாட்டு என்பது மீண்டும் ஒரு முறை நிரூபனமாகி இருக்கிறது.

தற்போது மழை காரணமாக ஆட்டம் நிருத்தப்பட்டுள்ளது. இந்திய அணி 47.3 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 237 ரன் எடுத்துள்ளது.பாண்டியா 19 ரன்னுடனும் புவனேஷ்வர் குமார் 18 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.