அடுத்த பிளைட் புடிச்சு ஒழுங்கா ஊருக்கு போயிடுங்க... இங்கிலாந்து அணியை வம்புக்கு இழுத்த முன்னாள் இந்திய வீரர் !! 1
அடுத்த பிளைட் புடிச்சு ஒழுங்கா ஊருக்கு போயிடுங்க… இங்கிலாந்து அணியை வம்புக்கு இழுத்த முன்னாள் இந்திய வீரர்

மூன்றாவது போட்டியில் மிக மோசமான தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அணியால் எஞ்சியுள்ள போட்டிகளிலும் வெற்றி பெற முடியாது என முன்னாள் இந்திய வீரரான ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி, ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே இங்கிலாந்து அணி மீது ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்திலும் மிக சிறப்பாக  செயல்பட்டு, இதன் மூலம் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.

அடுத்த பிளைட் புடிச்சு ஒழுங்கா ஊருக்கு போயிடுங்க... இங்கிலாந்து அணியை வம்புக்கு இழுத்த முன்னாள் இந்திய வீரர் !! 2

இந்திய அணிக்கு எதிரான இங்கிலாந்து அணியின் இந்த படுதோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் இங்கிலாந்து அணியின் தோல்வி குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான கிருஷ்ணமசாரி ஸ்ரீகாந்த், இங்கிலாந்து அணியின் பேஸ்பால் ஆட்டம் இந்திய ஆடுகளத்திற்கு சரிப்பட்டு வராது என தெரிவித்துள்ளார்.

அடுத்த பிளைட் புடிச்சு ஒழுங்கா ஊருக்கு போயிடுங்க... இங்கிலாந்து அணியை வம்புக்கு இழுத்த முன்னாள் இந்திய வீரர் !! 3

இது குறித்து  ஸ்ரீகாந்த் பேசுகையில், “வாய்ப்பு இருந்தால் இங்கிலாந்து அணி அடுத்த  பிளைட்டை பிடித்து இங்கிலாந்திற்கே சென்றுவிடும், ஆனால் வேறு வழி இல்லை அவர்கள் கடைசி இரண்டு போட்டிகளை நிச்சயம் விளையாடியாக வேண்டும். இங்கிலாந்து அணியின் பேஸ்பால் ஆட்டம் தற்போது அவர்களுக்கே எதிராக அமைந்துள்ளது. இங்கிலாந்து அணி இதே போன்று விளையாடினால் அவர்களுக்கு எதுவுமே கிடைக்காது என்பதே உண்மை. பேஸ்பால், பேஸ்பால் என ஓவர் பில்டப் கொடுக்கப்பட்டது ஆனால் ஆஷஸ் தொடரில் கூட இங்கிலாந்து அணிக்கு அவர்களது பேஸ்பால் ஆட்டம் கை கொடுக்கவில்லை. இந்திய மண்ணில் வைத்து இந்திய அணியை வீழ்த்துவது எளிதல்ல, அதற்காக இங்கிலாந்து அணி கடுமையாக உழைக்க வேண்டும். அவர்களது பேஸ்பால் ஆட்டம் இந்திய ஆடுகளத்திற்கு சரி வராது  என்பதே எனது கருத்து. மெக்கல்லம் அதிரடி ஆட்டத்தை விரும்புபவர், அவரால் அதிரடியாக விளையாடவும் முடியும், ஆனால் பென் ஸ்டோக்ஸ் அப்படி இல்லை. அனைவராலும் இதை சரியாக செய்து கொடுக்க முடியாது. சில நேரங்களில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தான் விளையாடியாக வேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *