சாம்பியன்ஸ் ட்ராபி 2017: லண்டனில் இந்திய அணியுடன் இணைந்தார் ரோகித் சர்மா

நியூஸிலாந்துக்கு முதல் பயிற்சி போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் இந்திய அணியுடன் இணைந்தார் ரோகித் சர்மா. இந்தியாவில் நடந்த 10வது டி20 தொடரில் 3வது முறையாக கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன், உறவினரின் கல்யாணம் காரணமாக இங்கிலாந்து செல்ல தாமதமாகியது. இதனால், கல்யாணம் முடிந்ததும் புறப்பட அவர் லண்டனில் இந்திய அணியுடன் இணைந்தார்.

இந்தியாவிற்காக கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விளையாடினார். கடந்த ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக 6 மாதம் கிரிக்கெட் விளையாடவில்லை. இதனால், லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தார்.

இதனால், 6 மாதம் கழித்து இந்தியன் பிரீமியர் லீக் விளையாடினார். அந்த தொடரில் 3வது முறையாக மும்பை இந்தியன்ஸுக்கு கோப்பையை வாங்கி தந்தார்.

மறுபடியும் இந்தியாவிற்காக விளையாட ஆர்வமாக உள்ளார், இதனால் லண்டனுக்கு புறப்பட்டு இந்திய அணியுடன் இணைந்தார். இந்த தகவலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அவரே தெரிவித்தார்.

முதல் பயிற்சி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் மோதிய இந்திய அணி டக்-ஒர்த் லெவிஸ் முறை படி 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் டாஸ் வென்று பேட்டிங் ஆட முடிவு செய்த நியூஸிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், முதல் இன்னிங்சின் முடிவில் 189 ரன் மட்டுமே நியூஸிலாந்து எடுத்தது. முகமது ஷமி மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

இரண்டாவது இன்னிங்சில் 7 ரன்னில் ரஹானே வெளியேற, தவான் கோலி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தது. மழை வரும்போது கோலி 55 ரன் அடித்திருக்க, 3 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களில் இருந்தது இந்தியா. மழை நிற்காத காரணத்தினால், டக்-ஒர்த் லெவிஸ் முறை படி 45 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

அடுத்த பயிற்சி போட்டியில் மே 30 ஆம் தேதி அன்று வங்கதேசத்துடன் மோதுகிறது இந்தியா.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.