சாம்பியன்ஸ் ட்ராபி 2017: போட்டியின் போது சண்டை போட்ட இக்பால் மற்றும் ஸ்டோக்ஸ்

தற்போது இங்கிலாந்தில் மினி உலக கோப்பை என அழைக்க படும் சாம்பியன்ஸ் ட்ராபி நடக்கிறது. இதில், ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இருக்கும் முதல் 8 அணிகள் தான் விளையாடும்.

இந்நிலையில், முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் வங்கதேச அணியும் மோதுகிறது. இந்த போட்டியின் போது வங்கதேசத்தை சேர்ந்த தமீம் இக்பாலும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸும் வார்த்தைகளால் மோதி கொண்டனர்.

இந்நிலையில் 32வது ஓவரில் 3வது பந்தில் இக்பால் பவுண்டரி அடித்தார்.இதனால், இக்பாலை பார்த்து ஸ்டோக்ஸ் ஏதோ பேசினார். இதனை பார்த்த நடுவர்கள், இருவரையும் சமாதனம் படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதனால் பீல்டிங் செய்ய பவுண்டரி கோட்டிடம் ஸ்டோக்ஸ் சென்றார். இக்பாலிடன் மோதியதை பார்த்த வங்கதேச அணியின் ரசிகர்கள் பென் ஸ்டோக்ஸை கலாய்த்தனர்.

அந்த தருணம் இக்பாலின் கவனத்தை மாற்ற வில்லை. இதனால், 39வது ஓவரில் அவர் சதம் அடித்தார். இந்த சாம்பியன்ஸ் டிராபியில் முதல் சதம் அடித்தார் தமீம் இக்பால். சாம்பியன்ஸ் டிராபியில் சதம் அடித்த 2வது வங்கதேச வீரர் என்ற பெருமையை பெற்றார் இக்பால்.

இருவருக்கும் இடையே நடந்த அந்த மோதலை இங்கே பாருங்கள்:

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.