புஜாரா இவ்ளோ நாள் மோசமா ஆடுனதுக்கு காரணமே இவர்தான்; அதிர்ச்சி கொடுத்த முன்னாள் வீரர்!! 1

இத்தனை நாட்கள் புஜாரா மிகவும் மோசமாக விளையாடி வந்ததற்கு காரணமே இதுதான் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விளக்கமளித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் மூத்த வீரர்கள் ஒருவரான சித்தேஸ்வரர் புஜாரா சரிவர விளையாடவில்லை. ஒரு சில போட்டிகளில் மட்டுமே 40, 50 ரன்கள் அடித்தார். அதிக முறை சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தர். இதனால் இந்திய அணி மிடில் ஆர்டரில் தொடர்ந்து திணறி வருகிறது.

புஜாரா இவ்ளோ நாள் மோசமா ஆடுனதுக்கு காரணமே இவர்தான்; அதிர்ச்சி கொடுத்த முன்னாள் வீரர்!! 2

சமீபத்தில் நடந்த நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர், இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் மற்றும் தற்போது தென் ஆப்பிரிக்கா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி என தொடர்ச்சியான சொதப்பல்கள் இதுவரை செய்து வருகிறார். மிடில் ஆர்டரில் இந்திய அணி தொடர்ந்து பின்தங்கி வருகிறது. புஜாராவின் இந்த சொதப்பல் ஆட்டத்திற்கு முக்கிய காரணம் இதுதான் என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.

“புஜாரா மிகவும் நிதானமாகவும் நேர்த்தியாக தடுபாட்டத்தையும் விளையாடக் கூடியவர். இவரது தொடர்ச்சியான சிக்கல்களுக்கு காரணம ரன்களை அடிக்க வேண்டும் என நினைப்பதுதான். துவக்கத்தில் அதிகமான பந்துகளை எடுத்துக்கொண்டு ரன்களை அடிக்க துவங்குவார்.

புஜாரா இவ்ளோ நாள் மோசமா ஆடுனதுக்கு காரணமே இவர்தான்; அதிர்ச்சி கொடுத்த முன்னாள் வீரர்!! 3

உதாரணமாக, 10 ரன்களை எடுப்பதற்கு நாற்பது ஐம்பது பந்துகளுக்கு மேல் எதிர்கொள்வார். நல்ல பந்துகளை கூட அவர் அடிக்க தவறுகிறார். ஒரே மாதிரியாக, பந்தை எதிர் கொள்வது தான் இதற்கு காரணம். நல்ல பந்துகள் வந்தால், அதை தடுப்பாட்டம் விளையாட வேண்டும். மோசமான பந்துகள் வந்தால் அதனை அடித்து விளையாட வேண்டும். ஆனால் புஜாரா துவக்கத்தில் தடுப்பாட்டம் மட்டுமே ஆட வேண்டும் என்ற நினைப்பில் நல்ல பந்துகளை விட்டுவிடுகிறார். அதேநேரம் மோசமான பந்துகளையும் விட்டுவிடுகிறார். இதன் காரணமாக பந்து வீச்சாளர்களுக்குகூடுதல் பலமாக அமைந்து விடுகிறது.

தென்னாப்பிரிக்கா போன்ற மைதானத்தில் தடுப்பாட்டம் விளையாடுவது சரியான தேர்வுதான். அதேநேரம் தொடர்ந்து அதை மட்டுமே செய்து கொண்டிருந்தால், பவுன்சர்கள் மட்டுமே போட்டு பந்து வீச்சாளர்கள் திணறடிப்பர். அது பேட்ஸ்மேன்களின் நம்பிக்கையை குறைத்து விடும். இதனால் எளிதாகவும் ஆட்டம் இழக்கக்கூடும். புஜாரா நல்ல பந்தை தடுத்துவிட்டு, மோசமான பந்துகளை அடித்து விளையாடுவதற்கு முன்வரவண்டும்.” என்றார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *