வங்கதேசத்தில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் 5வது தொடர் நடைபெற போகிறது. இந்த தொடருக்கு குல்னா டைட்டன்ஸ் அணி ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரரான கிறிஸ் லின்னை வாங்கி உள்ளது. இந்த தகவல் வலைத்தளங்களில் வந்தது.
“இந்த வருட பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடருக்கு டைட்டன்ஸ் அணிக்காக விளையாடப்போகிறார் ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின். உங்களுக்கு சந்தோசமா டைட்டன்ஸ் ரசிகர்களே?,” என முகநூலில் குல்னா டைட்டன்ஸ் அணி பதிவிட்டது.
இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்திலும் அறிவித்தது குல்னா டைட்டன்ஸ் அணி.
எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த டி20 தொடர் நவம்பர் தொடங்குகிறது.
பிக் பாஷ் லீக் தொடரில் கலக்கி விட்டு, இந்தியன் பிரீமியர் லீக்கையும் ஒரு கை பார்த்தார் கிறிஸ் லின். 7 போட்டியில் விளையாடிய அவர் 295 ரன் எடுத்து எதிரணி பந்துவீச்சாளர்கள் கண்களை கலங்க வைத்தார்.
27 வயதான கிறிஸ் லின், கேப்டன் சர்பராஸ் கான், ஸ்பின்னர் ஷடப் கான் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைட் கான் ஆகியோருடன் சேர்ந்து விளையாடவுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சியாளராக இருக்கும் மஹேலா ஜெயவர்த்தேனே, டைட்டன்ஸ் அணிக்காக அடுத்த இரண்டு வருடத்திற்கு பயிற்சியாளராக இருப்பார்.
இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ள அவர், பெரிதாக ஒன்றும் செய்யவில்லை.
.@khulnatitans are pleased to announce that @lynny50 will be joining the team for this year's BPL 2017 ! #khulnatitans #bplt20 pic.twitter.com/BTuNzUpcW3
— Khulna Titans (@khulnatitans) June 21, 2017