தோனி;
இந்தியாவின் முன்னாள் கேப்டனும் உலகின் பிரபல்யமான கிரிக்கெட் வீரருமான தல தோனி 2015 உலக கோப்பை தொடரின் போது நடந்த ஒரு சம்பவத்தை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார்.
அதில் தோனி 2015 இல் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் தனது முழு கவனத்தையும் செலுத்தினார், எப்பொழுதும் அணியை எவ்வாறு வழி நடத்துவது மற்றும் எவ்வாறு சிறப்பாக செயல்படுவது என்பதை மட்டுமே சிந்தித்தார். இதனால் இவர் மொபைல் போன் கூட பயன்படுத்துவது இல்லை அந்நேரத்தில் அவரது மனைவி சாக்ஷிக்கு குழந்தை பிறந்தது.

அந்த சந்தோசமான செய்தியை சுரேஷ் ரெய்னாவிற்கு எஸ்எம்எஸ் மூலம் சாக்ஷி தெரிவித்து தோனியிடம் கூறினார். இவ்வாறு அவர் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்தார். மேலும் தனது குழந்தையை ஒன்றரை மாதம் கழித்துதான் பார்த்தார் என்று கூறி அனைவரையும் வியப்படைய செய்தார்.