இந்த ஆண்டுக்கான ஐபிஎல்., கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் அஷ்வினை விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றொரு உள்ளூர் ஹீரோ முரளி விஜய்யை ஏலத்தில் எடுத்தது.
இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்.,) நடக்கிறது. இது வெற்றிகரமாக 11வது ஆண்டில் அடி எடுத்து வைக்கவுள்ளது.
இந்த ஆண்டில் சுமார் 2 ஆண்டு தடைக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்கவுள்ளது. இதில் சென்னை அணி, தங்களின் ஆஸ்தான வீரர்களான தோனி, ரெய்னா, ரவிந்திர ஜடேஜா ஆகியோரை தக்க வைத்தது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தின் முதல் நாளில் விலைபோகாத வீரர்கள் இன்று மீண்டும் ஏலத்தில் விடப்பட்டனர்.
அதில் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வினை நேற்று ஏலத்தில் எடுக்காத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று முரளி விஜய் வந்த போது அவரது அடிப்படை ஏல தொகையான ரூ. 2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்தது.